பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, நிதியமைச்சர் பந்துல குணவர்தனவின் பெயரை தவறாக கூறிய விவகாரம் நேற்று பாராளுமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த து.
பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நிதி அமைச்சின் கட்டளைகள் தொடர்பான விவாதம் இடம்பெற்றது.
இதன்போது உரையாற்றிய பந்துல குணவர்தன, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயரை ரவி கருணாநாயக்க ரவீந்திர சந்தேஷ் கணேஷ் என்று பிரயோகித்தார்.
எனினும் இதனைக் கடுமையாக எதிர்த்த சபை முதல்வரான லக்ஷ்மன் கிரியெல்ல, நிதி அமைச்சரின் பெயரை ரவி கருணாநாயக்க என்றே குறிப்பிட வேண்டுமென வலியுறுத்தினார். மேலும் இதனை இனவாத த்தை தூண்டும் செயலெனவும் குறிப்பிட்டார்.
ஆனால் இதனை ஏற்கமறுத்த பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன ஹன்சாட்டில் ரவி கருணாநாயக்க ரவீந்திர சந்தேஷ் கணேஷ் என்றே உள்ளதாகவும் இந்தப் பெயர் பொய்யென நிரூபித்தால் தான் பதவி விலகத் தயார் என்றும் சவால் விட்டார்.
பின்னர் சற்று நேரத்தில் மீண்டும் சபைக்கு வந்த பந்துல குணவர்தன எம்.பி. ரவி கருணாநாயக்கவின் பெயருடன் அடுத்ததாகவிருந்த எம்.கணேஷன் என்ற பெயரையும் தான் தவறுதலாக இணைத்து படித்துவிட்டதாகவும் அதனாலேயே ரவி கருணாநாயக்கவின் பெயரில் குழப்பம் ஏற்பட்டுவிட்டதாகவும், இதற்கு மன்னிப்பு கோருவதாகவும் , இதனை ரவி ஏற்றுக்கொண்டார் எனவும் தெரிவித்திருந்தார்.
இவ்விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், நேற்றைய தின அமர்வின் போது ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பிய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பந்துல குணவர்தனவின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்த துடன் , பந்துலவை பதவி விலகவேண்டுமெனவும் தெரிவித்திருந்தார்.
நடந்ததை காணொளியில் பாருங்கள்..
பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நிதி அமைச்சின் கட்டளைகள் தொடர்பான விவாதம் இடம்பெற்றது.
இதன்போது உரையாற்றிய பந்துல குணவர்தன, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயரை ரவி கருணாநாயக்க ரவீந்திர சந்தேஷ் கணேஷ் என்று பிரயோகித்தார்.
எனினும் இதனைக் கடுமையாக எதிர்த்த சபை முதல்வரான லக்ஷ்மன் கிரியெல்ல, நிதி அமைச்சரின் பெயரை ரவி கருணாநாயக்க என்றே குறிப்பிட வேண்டுமென வலியுறுத்தினார். மேலும் இதனை இனவாத த்தை தூண்டும் செயலெனவும் குறிப்பிட்டார்.
ஆனால் இதனை ஏற்கமறுத்த பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன ஹன்சாட்டில் ரவி கருணாநாயக்க ரவீந்திர சந்தேஷ் கணேஷ் என்றே உள்ளதாகவும் இந்தப் பெயர் பொய்யென நிரூபித்தால் தான் பதவி விலகத் தயார் என்றும் சவால் விட்டார்.
பின்னர் சற்று நேரத்தில் மீண்டும் சபைக்கு வந்த பந்துல குணவர்தன எம்.பி. ரவி கருணாநாயக்கவின் பெயருடன் அடுத்ததாகவிருந்த எம்.கணேஷன் என்ற பெயரையும் தான் தவறுதலாக இணைத்து படித்துவிட்டதாகவும் அதனாலேயே ரவி கருணாநாயக்கவின் பெயரில் குழப்பம் ஏற்பட்டுவிட்டதாகவும், இதற்கு மன்னிப்பு கோருவதாகவும் , இதனை ரவி ஏற்றுக்கொண்டார் எனவும் தெரிவித்திருந்தார்.
இவ்விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், நேற்றைய தின அமர்வின் போது ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பிய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பந்துல குணவர்தனவின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்த துடன் , பந்துலவை பதவி விலகவேண்டுமெனவும் தெரிவித்திருந்தார்.
நடந்ததை காணொளியில் பாருங்கள்..
0 Comments