Subscribe Us

header ads

போரின் இறுதி 12 மணிநேரத்தில் ஏற்பட்ட பொதுமக்களின் உயிரிழப்புக்கு புலிகளே காரணம்

இறுதிக் கட்­டப்­போரின் இறுதி 12மணி நேரத்தில் ஏற்­பட்ட பொது­மக்­களின் அதி­க­ள­வான உயிரி­ழப்­புக்­க­ளுக்கு தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக்­கத்­தி­னரே கார­ண­மா­க­வுள்­ள­தாக காணாமல்போனோர் தொடர்­பான மக்ஸ்வெல் பர­ண­கம தலை­மை­யி­லான ஆணைக்­குழு தனது விசா­ரணை அறிக்­கையில் தெரி­வித்­துள்­ளது.

மக்ஸ்வெல் பர­ண­கம தலை­மை­யி­லான ஆணைக்­குழு அறிக்கை, உடலா­கம ஆணைக்­கு­ழுவின் அறிக்கை, ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் மனித உரிமை மீறல் தொடர்­பான அறிக்கை ஆகி­யன நேற்றைய தினம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டது.
அவ்­வ­றிக்­கை­யி­லேயே இவ்­வாறு கூறப்­பட்­டுள்­ளது.
தமிழ் மக்கள் யுத்­தத்தில் கட்­டா­யத்தின் பேரில் இணைக்­கப்­பட்­டமை, சிறு­வர்கள் படையில் சேர்க்­கப்­பட்­டமை தொடர்பில் தமிழ் மக்­களின் பிர­தே­சங்­களில் பணி­யாற்­றிய அதி­க­மான தொண்டர் சர்­வ­தேச நிறு­வ­னங்­களும் குறிப்­பிட்­டுள்­ளன. யாழ்ப்­பா­ணத்தை தலை­மை­ய­க­மாகக் கொண்டு இயங்­கிய மரி­யா­தைக்­கு­ரிய தொண்டர் நிறு­வ­ன­மொன்று இறு­திக்­கட்ட யுத்­ததின் இறுதி 12மணி நேரத்தில் விடு­த­லைப்­பு­லி­க­ளா­லேயே அதி­க­ள­வான இழப்­புக்கள் ஏற்­பட்­டுத்­தப்­பட்­டுள்­ள­மையை மதிப்­பிட்­டுள்­ள­தாக அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
தருமன் அறிக்கை உட்­பட ஏனைய அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளதைப் போன்று பொது­மக்­களை இன­வ­ழிப்புச் செய்யும் நோக்கில் நேர­டி­யா­கவோ அல்­லது மறை­மு­க­மா­கவோ இலங்கை இரா­ணு­வத்­தி­னரால் திட்­ட­மிட்டு இலக்­கு­வைக்­கப்­பட்­டனர் என்ற பரிந்­து­ரையை நிரா­க­ரிப்­ப­தாக பர­ண­கம அறிக்கை தெரி­வித்­துள்­ளது. அத்­துடன் குறித்த அறிக்­கைகள் குறு­கிய மற்றும் வரை­ய­றைக்­குட்­பட்ட வகையில் விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்டு சர்­வ­தேச குற்­றங்கள் தொடர்­பாக விசா­ரண செய்­யு­மாறு வலி­யு­றுத்­து­வ­தா­கவும் பர­ண­கம அறிக்கை சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.
அத்­துடன் இறு­திக்­கட்­டத்தில் 3 இலட்சம் முதல் 3 இலட்­சத்து 30ஆயிரம் வரை­யி­லான தமிழ் மக்கள் போரில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டனர். அத்­துடன் மக்கள் மனித கேட­யங்­க­ளாக பயன்­ப­டுத்­த­பட்­டனர். அவர்­களை பய­ணக்­கை­தி­க­ளாக பயன்­ப­டுத்தி பதுங்கு குழி­க­ளையும் தோண்டும் செயற்­பா­டு­க­ளிலும் ஈடு­ப­டுத்­தினர். சிறு­வர்­களை போர்க்­க­ளத்தின் முன்­ன­ரங்­கங்­களில் போரி­டு­வ­தற்­காக பயன்­ப­டுத்­தினர்.
மக்­களை தம்­முடன் வைத்து விடு­த­லைப்­பு­லி­களின் தலை­மையின் பலத்தை பாது­காக்க முயன்­றனர். அத்­துடன் பரி­ய­ள­வி­லான பொது­மக்­க­ளுக்கு ஆயு­தங்கள் வழங்­க­பட்­டது. இதனால் பல்­வேறு உயி­ரி­ழப்­புக்கள் ஏற்­பட்­டன. புலி­களின் கட்­டுப்­பாட்டில் பொது­மக்கள் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தர்ர்ர்கள். அவர்­களின் கட்­டப்­பாட்டில் இருந்து இறுதித் தரு­ணத்தில் பொது­மக்கள் தப்­பிக்க முயன்­ற­போது அவர்கள் மர­ணத்தை அடைந்­தனர். அவர்கள் இலங்கை இரா­ணு­வத்­தினர் வீசிய ஷெல்­களால் உயி­ரி­ழந்­த­தாக பிர­சாரம் ஊட­கங்­க­ளுக்கு பிர­சாரம் வௌிநா­டு­களின் தலை­யீ­டு­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும் பயன்­ப­டுத்­தினர்.
பொது­மக்­களை கொலை செய்­வ­தற்­காக தற்­கொ­லை­குண்­டு­தா­ரிகள்இ நிலக்­கண்­வெ­டிகள் மற்றும் ஏனைய வெடி­பொருள் சாத­னங்­களைப் பயன்­ப­டுத்­தினர். இதனால் பாரி­ய­ள­வி­லான பொது­மக்கள் உயி­ரி­ழந்­தனர். அத்­துடன் புலிகள் சிறைப்­பி­டித்­த­வர்கள் தப்­பிக்க முயன்­ற­போதும் உயி­ரி­ழப்­புக்கள் ஏற்­பட்­டன. மேலும் ஆயுதம் தரித்­த­வர்கள் சிவில் உடையை அணிந்­தி­ருந்­தார்கள். அவர்­களின் உயி­ரி­ழப்­புக்­களும் பொது­மக்­களின் இறப்­புக்­க­ளாக காண்­பிக்­கப்­பட்­டுள்­ளது எனவும் அவ்­வ­றிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது.
இக்­கா­ர­ணங்­களின் அடிப்­ப­டையில் விடு­த­லைப்­பு­லிகள் மக்­களை மனித கேட­யங்­க­ளாக பயன்­ப­டுத்­தி­ய­மை­யா­லேயே அதி­க­ளவு உயி­ரி­ழப்­புக்கள் ஏற்­பட்­டுள்­ள­தாக ஆணைக்­குழு கண்­ட­றிந்­துள்­ள­தாக குறிப்­பிட்­டுள்­ளது.
இலங்கை இரா­ணு­வத்தின் ஷெல் தாக்­கு­தலில் குறிப்­பி­டத்­தக்க பொது­மக்கள் இறந்­துள்­ளார்கள் என்­பதை ஆணை ஏற்­றுக்­கொள்ளும் அதே­நேரம் பொது­மக்­களை தமது கட்­டுப்­பாட்­டி­லி­ருந்து செல்­வ­தற்கு விடு­த­லைப்­பு­லிகள் அனு­ம­தித்­தி­ருக்­கா­மை­யா­லேயே இவ்­வா­றா­ன­தொரு தவிர்க்க முடி­ய­தொரு விளைவு ஏற்­பட்­டுள்­ளது. எனினும் ஏப்ரல் 12ஆம் திகதி இலங்கை அர­சாங்கம் போர்­த­விர்ப்பை அறி­வித்­தி­ருந்­தை­மையும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­தோடு சிறு­வர்­களை போரில் ஈடு­ப­டுத்­து­வதை முற்­றாக நிரா­க­ரித்­தி­ருந்­தா­கவும் குறிப்­பிட்­டுள்­ளது.
காணமல் போனோர் தொடர்­பான விவ­கா­ரத்தை கையாள்­வ­தற்­காக பல்­வே­று­பட்ட பொறி­மு­றைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. எனினும் தற்­போது வரையில் உரிய தீர்­வொன்று கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை. ஒருங்­கி­ணைந்த பொறி­முறை மற்றும் தேசிய பொறி­முறை ஊடாக காணமல் போனோரின் குடும்­பங்­க­ளுக்கு ஆத­ர­வோடும் அன்­போடும் வாழ்­வா­தார உத­விகள் தொடர்ந்தும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும் என்­பதை ஆணைக்­குழு வலி­யு­றுத்­தி­யுள்­ளது.
வீட்­டி­லி­ருந்­த­போதே உற­வுகள் அழைத்துச் செல்­ல­பட்­டுள்­ள­தாக பல முறைப்­பா­டுகள் ஆணைக்­கு­ழு­விற்கு கிடைத்­துள்­ள­தோடு வௌியில் சென்ற போதும் சிலர் காண­மல்­போ­ன­தா­கவும் முறைப்­பா­டுகள் பதி­வா­கி­யுள்­ளன. எனினும் காண­மல்­போ­யுள்­ளார்கள் என்ற விடயம் மூன்றாவது தரப்பினராலேயே உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிடுகின்றது.
விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் தொடர்புடைய குற்றச்சாட்டில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் குறித்து சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. அத்துடன் உள மற்றும் சமுக சேவைகளை முன்னெடுக்குமாறும் ஆணைக்குழு சிபார்சு செய்துள்ளது.
பரணகம ஆணைக்குழுவானது வடக்கு கிழக்கு உட்பட நாடாளவிய ரீதியில் 12அமர்வுகளை செய்திருந்தது. குறித்த ஆணைக்குழுவில் மக்ஸ்வெல் பரணகம உட்பட சுரஞ்ஜன வித்தியாரட்ன, மனோராமநாதன், ரத்நாயக்க, எச்.சுமணபால ஆகியோர் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments