Subscribe Us

header ads

புத்தளம் நகரை மீள் நிருமாணம் செய்வதற்கு புத்தளம் முகா தயாராகின்றது

-The Puttalam Times-

இலங்கையில் தெரிவுசெய்யப்படும் 20 நகரங்களை வெளிநாட்டு நிதியுதவியுடன் மீள் நிருமாணம் செய்வதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை (UDA) தீர்மானித்துள்ளது. இந் நகரங்களின் பட்டியலில் புத்தளம் நகரை உள்வாங்குவதற்காக நகர அபிவிருத்தி நீர் வழங்கல் அமைச்சர், ஸ்ரீலமுகா தலைவர் ரவுப் ஹக்கீமிடம் பரிந்துரை செய்து தொடர் அழுத்தங்கள் கொடுப்போம் என புத்தளம் நகர ஸ்ரீலமுகா குழு தெரிவித்தது.


ஸ்ரீலமுகாவின் உயர் பீட உறுப்பினர்களின் தலைமையில் 2015.09.12 ஆம் திகதி நடைபெற்ற மேற்படி கூட்டத்தில் புத்தளம் நகரில் ஸ்ரீலமுகாவின் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் நோக்கில் இடைக்கால மத்தியக் குழுவும் வட்டார ரீதியாக அமைப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். மேலும், ஸ்ரீலமுகா ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப், அன்மையில் காலமான மர்ஹூம் எம். லாஹிர் (புத்தளம்) ஆகியோர் நினைவு கூறப்பட்டனர்.

இன்னும் ஒரு மாத காலத்தில், ஸ்ரீலமுகா பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம் (சுகாதார பிரதி அமைச்சர்), ஹரீஸ் (விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர்), பா.உ.க்களான சுபியான், அலி சாஹிர் மௌலானா, மன்சூர் ஆகியோரை வரவழைத்து புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்திகள் தொடர்பாக சிறப்பு கலந்துரையாடலொன்று நடத்தப்படவுள்ளதாக புத்தளம் ஸ்ரீலமுகா கொள்கைப் பரப்புச் செயலாளர் ஜே.எம். லிப்திThe Puttalam Timesக்குத் தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் புத்தளம் நகரம், மணல்குன்று, தில்லையடி, ரத்மல்யாய, கரைத்தீவு ஆகிய மத்தியக் குழுக்களின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இடைக்கால புத்தளம் நகர மத்தியக் குழு விவரம்:

தலைவர் – எம்.டி.என். அமீன்

இணைத் தலைவர், கொ.ப.செ. – ஜே.எம். லிப்தி

இணைத் தலைவர் – பி.ஐ. சாஜஹான்

செயலாளர் – பாரூக் பதீன்

பொருளாளர் – ஏ.ஆர்.எம். றமீஸ்

உப செயலாளர் – எச்.ஓ.எம். தாரிக்

தொகுப்பும் படங்களும்: Hisham Hussain, Puttalam






Post a Comment

0 Comments