-The Puttalam Times-
புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி, பாத்திமா முஸ்லிம் பாலிகா கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர் சங்கங்களின் ஏற்பாட்டில் க.பொ.த. உயர் தரம் பயின்ற மாணவர்களுக்கான உயர் கல்வி தொழில் வழிகாட்டல் கருத்தரங்கொன்று இன்று (12) சாஹிரா தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
நாடளாவிய ரீதியில் இயங்கும் BCAS Wayamba Campus, புத்தளம் IMARA Sollutions நிறுவனம், Amana Bankபுத்தளம் கிளை, புத்தளம் NPI நிறுவனம் ஆகியன இணைந்து இக் கருத்தரங்கில் பங்குகொண்டன.
BCAS Campus வளவாளர்களான லுக்மானுல் ஹக்கீம் (MA) Phd (Reading), பொறியிலாளர் அப்துர் ரஹீம் (ProgramManager), ஏ.எம். ரியாஸ் (Manager – Students’ Affairs), எம்.எச்.எம். சரூக் (Asst. Manager – Business Development)ஆகியோருடன் எம்.ஐ.எம். ருஷ்தி, இன்ஸாப் சாபார் (IMARA Solutions), அனஸ் நாகூர், எம்.என்.எம். நிப்ராஸ்(Amana Bank), உமா சங்கர் (NPI), ஆகியோரும் கலந்துகொண்டனர்.
“பாடசாலை மாணவராக இருக்கும் போது உள்ள மன நிலை A/L பெறுபேறு கிடைத்த பின்னர் பாரிய மாற்றத்திற்கு உள்ளாகும். பாடசாலையில் இருக்கும் வரை எதிர்காலம் பற்றிய கனவுகள் A/L எழுதிய பின்னர் எதிர்பாராத திருப்பங்களைச் சந்திக்கின்றது. எனவே, நீங்கள் மாணவராக இருந்த காலம் வேறு, இப்போது இருக்கும் காலம் வேறு. இதனை நன்றாக மனதில்கொள்ள வேண்டும்” என ‘உன்னை அறிவாய்’ (Know Yourself)என்ற தலைப்பில் விரிவுரையாற்றிய லுக்மானுல் ஹக்கீம் கூறினார்.
“ஒரு மாணவன், தனது எதிர்காலத் துறையைத் தீர்மானிப்பதில் பெற்றோரின் ஆசை, நண்பர்களின் ஆர்வம், பாடசாலை ஆசிரியர்களின் உந்துதல் ஆகியன பெரும் தாக்கத்தை செலுத்துகின்றது. இந்தப் புற அழுத்தங்களினால் அந்த மாணவரின் ஆற்றல்களுக்கு மாற்றமான ஒரு துறைக்குள் தள்ளப்படுகின்றான். உயர் கல்வியிலோ அல்லது தொழில் கல்வியிலோ தான் எதிர்பார்த்த பெறுபேற்றைப் பெற முடியாமல் தவிக்கின்றான். எனவே, உங்களுக்குப் பொருத்தமான துறையைத் தெரிவுசெய்ய வேண்டும்” என்றும் அவர் கூறினார்.
இக் கலந்துரையாடலில் சுமார் 100 மாணவர்கள் வரை கலந்தகொண்டு பயன்பெற்றனர்.
இக் கருத்தரங்கு தொடர்பாக புத்தளம் பாத்திமா மு.பெ.க. பழைய மாணவியர் சங்கத்தின் உறுப்பினரான நுஷ்ரா வஹ்ஹாப், ‘உயர் தரம் பயின்ற அதிகமான மாணவர்களுக்கு பல்கலைக்கழக நுழைவு விண்ணப்பத்தை சரியாக நிரப்ப முடியாத நிலையைக் கண்டோம். தனக்குரிய துறையைத் தெரிவுசெய்வதில் அவர்களுக்குள் இருக்கும் குழப்பமான மன நிலையையும் கண்டிருக்கின்றோம். மறுபுறத்தில் ஆண் (மாணவர்)கள், ஒரு வெளிநாட்டு வேலை வாய்ப்பைப் பெற்று Data Entry Operator ஆக வேலை செய்வதை பெரிய சாதனையாகக் கருதுகின்றார்கள். Software Developer போன்ற உயர் தொழில்கள் பற்றிய தகவல்கள் வழிகாட்டல்கள் அவர்களுக்குத் தேவைப்படுகின்றது. அந்த வகையில் இவ்வாறான உயர் கல்வி தொழில் வழிகாட்டல் கருத்தரங்குகள் முக்கித்துவம் பெறுகின்றன” எனக் கூறினார்.
தொகுப்பும் படங்களும்: Hisham Hussain, Puttalam
![]() |
MHM Zarook |
![]() |
Lukmanul Hakeem |
0 Comments