Subscribe Us

header ads

ஐஎஸ் அமைப்பிற்கு இலங்கை ஆயுதம் வழங்கிய தகவல் பொய்யானது! திவயின செய்தி


உலகின் மிகக் கொடூரமான தீவிரவாத அமைப்பான ஐஎஸ் அமைப்பிற்கு இலங்கை ஆயுதம் வழங்கியதாக கடந்த காலங்களில் வெளியான தகவல் பொய்யானது என்று தெரியவந்துள்ளது.

கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில் இலங்கையிலிருந்து போகோஹரம் மற்றும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆயுத விநியோகம் மேற்கொள்ளப்பட்டதாக பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன.

குறித்த பொய்ப் பிரச்சாரம் காரணமாக இலங்கையின் நற்பெயருக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

எனினும் இது தொடர்பான தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை என்பதாக இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிசாரின் விசாரணைகளில் தற்போது தெரிய வந்துள்ளது.

அத்துடன் அமெரிக்காவின் சீஐஏ, பிரிட்டனின் எம்ஐ , இஸ்ரேலின் மொசாட் மற்றும் இந்தியாவின் ரோ போன்ற உளவு அமைப்புகளும் இது குறித்த தகவல்கள் ஏதும் இல்லை என்பதாக குறித்த செய்தியினை நிராகரித்துள்ளதாகவும் திவயின பத்திரிகை செய்தி தெரிவிக்கின்றது.

அந்த வகையில் குறித்த செய்தி இலங்கையின் ஊடகங்கள் கட்டியெழுப்பிய பொய்ப்பிரச்சாரங்களில் ஒன்றாகவே கருதப்பட வேண்டியிருப்பதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஐ எஸ் தீவிரவாத அமைப்பின் பின்னணியில் அமெரிக்கா செயற்படுவதாக அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வு அதிகாரி எட்வர்ட் ஸ்நோடன் அண்மையில் பரபரப்புத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments