Subscribe Us

header ads

நேபாளம் செல்வதை தவிர்த்துக்கொள்ளவும்

மறு அறிவித்தல் கிடைக்கும் வரை நேபாளம் லும்பினிக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு இலங்கையர்களிடம் நேபாலிலுள்ள இலங்கைத் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. 
நேபாளில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளதால் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 
அண்மையில் இடம்பெற்ற மோதல்களால் பாதிக்கப்பட்ட இலங்கை பிரஜைகளை நாட்டுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக இலங்கையின் நேபாள தூதுவர் டபிள்யு.எம்.செனவிரட்ன தெரிவித்தார்.
மேலும், லும்பினிக்கு செல்வதற்கான பயணம் செய்வதாயின் அல்லது லும்பினி பகுதிக்கு பயணித்துக்கொண்டிருப்பவர்களுடன் தொடர்புகொள்ள  0097714720623 /  0097714720213 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments