Subscribe Us

header ads

"நான் போட்டியிடவில்லை, ஆகையால் தோல்வியடையவில்லை" ரங்கா கூறும் புதுவிளக்கம்

மலை­யக மக்­களை மீண்டும் ஒரு முறை ஏமாற்ற திட்­ட­மிட்ட பிர­ஜைகள் முன்­ன­ணிக்கு மலை­யக பெருந்­தோட்ட மக்கள் சரி­யான பாடம் புகட்­டி­யுள்­ளார்கள். நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் பிர­ஜைகள் முன்­ன­ணிக்கு 2250 வாக்­கு­களை மட்டும் அளித்து தமது தீர்ப்பை தெளி­வாக வழங்­கி­யுள்­ளார்கள்.

தேர்தல் முடிந்­த­வுடன் காணாமல் போயி­ருந்த ரங்கா கடந்த 28 ஆம் திகதி சிரச தொலை­காட்­சியில் இடம்­பெற்ற தவச என்ற நிகழ்ச்­சியில் நிகழ்ச்சி தொகுப்­பாளர் கேட்ட கேள்­விக்கு பின்­வ­ரு­மாறு பதில் கூறி­யுள்ளார். நான் தோல்­வி­ய­டை­ய­வில்லை ஏனென்றால் நான் தேர்­தலில் போட்­டி­யிட வில்­லையே போட்­டி­யிட்டு நான் தோல்­வி­ய­டைந்­தி­ருந்தால் தான் அது தோல்வி என அவர் குறிப்­பிட்­டி­ருந்தார். இங்கு ஒரு கேள்வி எழு­கி­றது.

அப்­ப­டி­யானால் 11 பெண்­களை கள­மி­றக்கி தேர்­தலில் போட்­டி­யிட்ட பிர­ஜைகள் முன்­னணி உங்­க­ளு­டை­யது இல்­லையா? அதன் செய­லாளர் நீங்கள் இல்­லையா ? தோல்­வியை தழு­விய பிறகும் நான் போட்­டி­யிட வில்­லையே எனக்­கூறி அந்த 11 பெண்­க­ளையும் காட்­டிக்­கொ­டுத்து அவர்­களே தோல்­விக்­குக்­கா­ரணம் என அர்த்­தப்­பட கூறும் இவரின் சுய­ரூ­பத்தை இப்­போ­தா­வது அந்த பெண்கள் உணர்ந்தால் சரி.
இதற்கு அந்த முன்­ன­ணியின் செய­லாளர் ஜெய ஸ்ரீ ரங்கா என்ன பதில் சொல்லப் போகின்றார். தொலைக்­காட்­சியில் நன்­றாக அர­சியல் வாதி­க­ளிடம் கேள்வி கேட்­கின்றார்.எனவே இவர் அர­சி­ய­லுக்கு வந்தால் நன்­றாக செயற்­ப­டுவார் என்ற நம்­பிக்­கையில் 2010 வருடம் மலை­யக மக்கள் தமது வாக்­கு­களை வழங்கி தேர்­தலில் வெற்றி பெறச் செய்­தார்கள்.
ஆனால் அந்த குறித்த தொலைக்­காட்­சியில் குறித்த அந்த நிகழ்ச்சி ஏற்­க­னவே திட்­ட­மி­டப்­பட்டு கேள்வி பதில்கள் தயா­ரிக்­கப்­பட்­டன என்­பது அவர்­க­ளுக்கு தெரி­யாது. என்ன கேள்வி என்ன பதில் என்­பதை நிகழ்ச்­சியை தொகுத்து வழங்கும் ரங்­காவால் தீர்­மா­னிக்­கப்­பட்ட பின்பு அதனை பங்­கு­பற்­று­ப­வர்கள் ஒப்­பு­விக்கும் ஒரு நிகழ்ச்­சி­யா­கவே இது அமைந்­தது என்­பதை அனை­வரும் அண்­மையில் வெளி­யான சமூக வலை­த­ளங்கள் மூலம் நன்கு அறிந்து கொண்­டார்கள்.அதன் பின்பு அந்த நிகழ்ச்சி இடை­நி­றுத்­தப்­பட்­டது.
இந்த தேர்­தலில் மலை­யக மக்கள் சார்­பாக 11 பெண்­களை தனது கட்­சியின் மூலம் களம் இறக்­கு­வ­தாக கூறி அந்த பெண்­களை கொழும்­பிற்கு அழைத்து வந்து அவர்­க­ளுக்கு அழகு கலை நிலை­யங்­களில் அழ­கு­ப­டுத்தி தோதலில் போட்­டி­யிட வைத்தார்.நான் அவரைப் பார்த்து கேட்க விரும்­பு­கின்றேன் பாரா­ளு­மன்­றத்­திற்கு செல்லும் பெண்கள் எல்­லோரும் அழகு கலை நிலை­யத்­திற்கு ஏன் செல்ல வேண்டும் என்­பதை அவர் தெளி­வு­ப­டுத்த வேண்டும்.
அவர்­க­ளுக்கு அர­சியல் அறிவை கொடுத்தால் அதனை வர­வேற்­கலாம்.சில வேளை இத­னையும் திட்­ட­மிட்டு நடத்தும் நிகழ்ச்­சியை போல தேர்­தலை நினைத்­தாரோ தெரி­ய­வில்லை.ஊட­கங்­களின் நடு­நி­லை­மை­பற்றி அதா­வது வீர­கே­ச­ரி­யி­னதும் ,சூரி­ய­காந்தி பத்­தி­ரிக்­கை­பற்­றியும் கேள்வி எழுப்­பு­கின்ற இவர் இவர் பணி­யாற்றும் ஊட­கத்தின் தர்­மம்­பற்றி யார் கேள்வி எழுப்­பு­வது ? கடந்த பல தசாப்­தங்­க­ளாக இலங்கை வாழ் தமி­ழர்­க­ளுக்கு உய­ரிய சேவையை வீர­கே­சரி நிறு­வனம் வழங்­கி­யுள்­ளதை மக்கள் அறி­வார்கள்.உங்கள் நிறு­வ­னத்தின் செய்திச் சேவை எப்­படி இருக்­கின்­றது என்­ப­தையும் மக்கள் அறி­வார்கள்.
நீங்கள் ஒரு பாட­சா­லைக்கு பாத­ணி­களை வழங்கும் நிகழ்வை தலைப்பு செய்­தி­யாக போட்டு செய்தி ஒளி­ப­ரப்­பா­ன­தையும் இந்த மக்கள் அறி­வார்கள்.ரங்கா என்­பவர் அவ­ரு­டைய தொலைக்­காட்சி நிகழ்ச்­சியில் கேள்வி கேட்­பது போல எமக்கும் இந்த சந்­தர்ப்­பத்தை வழங்­கு­வாரா? அவ­ரு­டைய தொலைக்­காட்­சியில் இல்­லா­விட்­டாலும் அர­சாங்க தொலைக்­காட்­சியில் ஒரு விவா­தத்­திற்கு வரு­வாரா? காரணம் இது­வ­ரையில் அவர் கேள்வி கேட்டு நடத்தும் திட்­ட­மிட்ட நிகழ்ச்­சி­யாக இல்­லாமல் உண்­மை­யா­கவே ஒரு நேரடி நிகழ்ச்­சி­யாக நடத்த ஒத்­து­ழைப்­பாரா? மலை­யக மக்கள் மீது அதிக அக்­க­றை­யுள்­ள­வ­ராக காட்டிக் கொள்ளும் ரங்கா இந்த மக்­க­ளுக்கு செய்­தி­ருக்­கின்ற சேவை­களை என்ன என்­பதை தெளி­வு­ப­டுத்திக் கொள்ள வேண்­டிய தேவை எமக்கு இருக்­கின்­றது.
எத்­தனை ஊட­க­வி­ய­லா­ளர்­களை அவர் உரு­வாக்­கி­யி­ருக்­கின்றார் ?எமக்கு தெரிந்த வகையில் அவ­ரு­டைய தொலைக்­காட்­சியில் பிராந்­திய செய்­தி­யா­ளர்­க­ளாக இருந்த பலரை வெளி­யேற்­றிய பெருமை அவ­ருக்கு உண்டு.அதில் அதி­க­மா­ன­வர்கள் மலை­யக செய்­தி­யா­ளர்கள் என்­பதை கூற வேண்டும்.அதில் நானும் ஒருவன்.
எங்­க­ளுக்கு ரங்­கா­வைப்­பற்றி சில விட­யங்கள் தெரிந்து கொள்ள வேண்­டி­யுள்­ளது.
யார் இந்த ரங்கா?
எங்­கி­ருந்து வந்தார்?
இவ­ரு­டைய பின்­னணி என்ன?
மலை­யக மக்­க­ளுக்கும் இவ­ருக்கும் உள்ள தொடர்பு என்ன?
மலை­ய­கத்­தைப்­பற்றி இவ­ருக்கு என்ன தெரியும்?
இவர் மலை­ய­கத்தில் கடந்த 5 வரு­டத்தில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்து செய்த சேவைகள் என்ன?
இவர் ஊட­க­வி­ய­லாளர் என தன்னை அறி­மு­கப்­ப­டுத்திக் கொள்­வதால் எத்­தனை ஊட­க­வி­ய­லா­ளர்­களை மலை­ய­கத்தில் உரு­வாக்­கி­யி­ருக்­கின்றார்?
தொழிற்­சங்க சந்­தாவை ஏள­னப்­ப­டுத்தும் இவரால் ஏன் தொழிற்­சங்கம் ஒன்றை உரு­வாக்க முடி­யா­துள்­ளது?
இவ­ரு­டைய கட்­சியின் தலைவர் யார்?
எத்­தனை உறுப்­பி­னர்கள் இருக்­கின்­றார்கள்?
ஏன் நடந்து முடிந்த தேர்­தலில் தான் போட்­டி­யி­ட­வில்லை?
உங்கள் பிறந்த ஊரில் என்ன செய்­தி­ருக்­கின்­றீர்கள்?
ஏன் பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு மலை­ய­கத்தில் வந்து அர­சியல் செய்­கின்­றீர்கள்?
நீங்கள் ஊட­க­வி­ய­லா­ளரா?அல்­லது அர­சியல் வாதியா?அல்­லது வேறு யாருமா?

இந்த கேள்­வி­க­ளுக்கு தாங்­க­ளு­டைய ஊட­கத்தில் நீங்கள் மட்டும் இருந்து கொண்டு பதில் கூறாமல் எங்களையும் அழைத்து பேசினால் அது உண்மையான ஒரு நிகழ்ச்சியாக இருக்கும் என நான் எதிர்பார்க்கின்றேன். அது பதிவு செய்யப்பட்டு ஒளிப்பதிவு செய்யும் நிகழ்ச்சியாக இல்லாமல் நேரடி நிகழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியம். அவருக்கு இங்குள்ள பல தொழிற்சங்கங்களுக்கும் மக்கள் நல்ல பதில் தேர்தலில் வழங்கியிருக்கின்றார்கள்.
எனவே மலையக தலைவர்களும் சரியாக அடுத்த ஜந்து வருடத்தில் சரியான முறையில் செயற்படாவிட்டால் உங்களையும் மக்கள் நிராகரிக்க தயங்க மாட்டார்கள். 
-நுவரெலியா கண்ணன்-
நன்றி சூரியகாந்தி

Post a Comment

0 Comments