கொழும்பு கிராண்பாஸ், ஸ்டேட்புர பகுதியில் நபர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் மக்கள் ஆர்ப்பட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த பகுதியில் தற்போது பதற்ற நிலை காணப்படுவதாக கிராண்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, பலாமரச் சந்தியிலிருந்து ஒருகொடவத்தை சந்தி வரையிலான வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிராண்பாஸ் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments