Subscribe Us

header ads

கொழும்பில் 32 பேர் காணாமல் போனமைக்கு கடற்படை அதிகாரிகள் காரணம்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்

வடக்கில் யுத்தம் நடந்­து­கொண்­டி­ருக்­கையில் கொழும்பில் கடற்­ப­டை­யினர் சட்­ட­ரீ­தி­யற்ற முறையில் ஆட்­க­டத்­தலில் ஈடு­பட்­டுள்­ள­மைக்கு விசா­ர­ணை­யின் ­போது பல சான்­றுகள் வெளி­வந்­துள்­ளன.
தெஹி­வ­ளையில் கடத்­தப்­பட்ட ஐந்து மாண­வர்கள் உட்­பட கொழும்பு மாவட்­டத்தில் 32 பேர் கடத்­தப்­பட்டு காணா­மற்­போ­ன­மைக்கு கடற்­ப­டையைச் சேர்ந்த அதி­கா­ரிகள் கார­ண­மாக இருந்­துள்­ள­மைக்கும் சான்­றுகள் வெளிக்­கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளன என்று சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கே.வி.தவ­ராசா நீதி­மன்­றத்தில் சுட்­டிக்­காட்­டினார்.
2008ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் 17ஆம் திகதி தெஹி­வ­ளையில் 3 தமிழ் இளை­ஞர்­க­ளான மாண­வர்­களும் அவர்­க­ளது இரண்டு முஸ்லிம் நண்­பர்­க­ளான மாண­வர்­களும் பயணம் செய்த வாக­னத்­துடன் கடத்­தப்­பட்­டனர். 
இவ்­வாறு கடத்­தப்­பட்ட மாண­வர்­க­ளது பெற்றோர் தாக்கல் செய்த ஆட்­கொ­ணர்வு மனு மீதான விசா­ரணை கொழும்பு நீதிவான் நீதி­மன்­றத்தில் நடை­பெற்று வரு­கி­றது. கடந்த வியாழக்கிழமை இவ்விசாரணை நடைபெற்றபோது தொகுப்புரை சமர்ப்பணத்திலேயே சிரேஷ்ட சட்டத்தரணி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தெகி­வ­ளையில் 2008 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் 17 ஆம் திகதி இரவு 10 மணி­ய­ளவில் மூன்று தமிழ் இளை­ஞர்­களும் அவர்­க­ளது நண்­பர்­க­ளான இரண்டு முஸ்லிம் இளை­ஞர்­களும் பயணம் செய்த வாக­னத்­தோடு கடத்­தப்­பட்­டனர்.
கடத்­தப்­பட்டு காணா­மல்­போன மாண­வர்­களின் மூன்று மாண­வர்­களின் பெற்­ற­றோர்களை மனு­தா­ரர்­க­ளாக பெயர் குறிப்­பிட்டு சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கௌரி சங்­கரி தவ­ராசா தாக்கல் செய்த ஆட்­கொ­ணர்வு மனுக்கள் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் விசா­ரிக்­கப்­பட்ட வேளையில் சாட்­சி­களை விசா­ரணை செய்து அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்­றத்­திற்கு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டி­ருந்­தது.
கடத்­தப்­பட்ட மாண­வர்­க­ளான ராஜீவ் நாக­நா­தன் பிரதீப் விஸ்­வ­நா­தன் தில­கேஸ்­வரன் ராம­லிங்கம் ஆகி­யோரின் சார்பில் மனு­தா­ரர்கள் மற்றும் சாட்­சி­யங்கள் நிறை­வு­பெற்­ற­தை­ய­டுத்து மனு­தா­ரர்­களின் சார்பில் ஆஜ­ரா­கிய சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கே.வி. தவ­ராசா தனது சட்ட நிகழ்வுச் சமர்ப்­ப­ணத்தில் நீதி­மன்றின் கவ­னத்­திற்கு கொண்­டு­வந்­த­தா­வது.
இந்த ஆட்­கொ­ணர்வு வழக்கு விசா­ர­ணையில் நான் மனு­தா­ரர்­க­ளான கடத்­தப்­பட்ட மாண­வர்­க­ளான ராஜீவ் நாக­நா­தன், பிரதீப் விஸ்­வ­நா­தன், தில­கேஸ்­வரன் ராம­லிங்கம் ஆகி­யோரின் சார்பில் மனு­தா­ரர்­க­ளான சரோஜா நாக­நா­தன், காவேரி ராம­லிங்­கம் விஸ்­வ­நா­தன்­­ ஆ­கி­யோ­ரும் மட்­டு­மின்றி கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவின் பொறுப்­ப­தி­கா­ரி­யாகக் கட­மை­யாற்­றிய எம்.ஏ ஜய­தி­லக, புல­னாய்வுப்பிரிவின் பொறுப்­ப­திகா­ரி­யான ரஞ்ஜித் முன­சிங்­க புல­னாய்வுப் பிரிவின் விசா­ரணை அதி­காரி நிசாந்த சில்­வா, புல­னாய்வுப் பிரிவின் பொறுப்­ப­திகா­ரி­யான ரஞ்ஜித் முன­சிங்­க புல­னாய்வுப் பிரிவின் விசா­ரணை அதி­காரி நிசாந்த சில்­வா, கடற்­படை கபிதான் சேனக பெரே­ரா, கொழும்புக் கோட்டை நீதி­மன்றின் பதி­வா­ள­ரா­கிய மானெலி சிறி­ம­தி ஆகி­யோரை மனு­தா­ரர்­களின் சாட்­சி­யா­ளர்­க­ளாக அழைத்து இவர்­க­ளது சாட்­சி­யங்­களை நெறிப்­ப­டுத்­தி­யுள்ளேன்.
முன்னாள் கடற்­படைத் தள­பதி வசந்த கரன்­னா­கொட தனது பிரத்­தி­யேக மெய்ப் பாது­கா­வ­ல­ரா­க­விருந்து பல விட­யங்­களில் செயற்­பட்ட கடற்­ப­டையைச் சேர்ந்த லுதினன் கமாண்டர் சம்பத் முன­சிங்­க­விற்கு எதி­ராக பொலிஸ் மா அ­தி­ப­ருக்கு செய்­யப்­பட்ட முறைப்­பாட்டு விசா­ர­ணையில் வெளிவந்த பல முக்­கி­ய­மான சான்­று­களும் கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவும் புல­னாய்வுப் பிரி­வி­னரும் கொழும்புக் கோட்டை நீதி­மன்றில் தாக்கல் செய்த விசா­ரணை அறிக்­கை­களும் இந்த ஆட்­கொ­ணர்வு மனு விசா­ர­ணையில் முக்­கிய திருப்­பத்­திற்கு முக்­கிய கார­ண­மாகும்.
லுதினன் கமாண்டர் சம்பத் முன­சிங்­க­விற்கு புலி­க­ளுடன் தொடர்பு உண்டு என முன்னாள் கடற்­படைத் தள­பதி வசந்த கரன்­னா­கொட பொலிஸ் மாஅ­தி­ப­ருக்கு செய்த முறைப்­பாட்டை பொலிஸார் விசா­ரணை செய்த பொழுது தெஹி­வ­ளையில் கடத்­தப்­பட்டு காணாமல் போன 5 மாண­வர்கள் உட்­பட கொழும்பு மாவட்­டத்தில் 32 பேர் கடத்­தப்­பட்டு காணாமல் போன­மைக்கு கடற்­ப­டையை சேர்ந்த அதி­கா­ரிகள் சம்­பந்தப் பட்­டுள்­ள­மைக்கு சான்­றுகள் வெளிக் கொண்டு வரப்­பட்­டுள்ள அதே வேளையில் லுதினன் கமாண்டர் சம்பத் முன­சிங்க முன்னாள் கடற்­படைத் தள­பதி வசந்த கரன்னாகொட பலரைக் கொலை செய்­யும்­படி தனக்கு கட்­ட­ளை­யிட்­டுள்­ள­தாக கொழும்புப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு வாக்­கு­மூலம் வழங்­கி­யுள்ளார்.
முன்னாள் கடற்­படைத் தள­பதி வசந்த கரன்­னா­கொ­ட­விற்கும் அவ­ரது பிரத்­தி­யேக மெய்ப் பாது­கா­வ­ல­ரா­க­யி­ருந்த லுதினன் கமாண்டர் சம்பத் முன­சிங்­க­விற்கும் இடையில் ஏற்­பட்ட முரண்­பா­டு­க­ளினால் பல விட­யங்கள் வெளிக் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளன.
இந்த ஐந்து மாண­வர்கள் கடத்­தப்­பட்டு காணாமல் போயுள்­ள­மைக்கு இலங்கை கடற்­ப­டையைச் சேர்ந்த அதி­கா­ரி­களே பொறுப்பு என்­ப­தனை வாய்­மூலச் சான்றாக மட்­டு­மின்றி கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி புல­னாய்வுப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி ஆகிய இரு­வரும் கொழும்புக் கோட்டை நீதி­மன்றில் தாக்கல் செய்த 40 புல­னாய்வு அறிக்­கை­க­ளி­னதும் அத்­தாட்­சிப்­ப­டுத்­தப்­பட்ட பிர­தி­க­ளையும் நீதி­மன்றில் தாக்கல் செய்து சாட்­சி­யங்­களை நெறிப்­பு­டுத்­தி­யுள்ளேன்.
இந்த நீதி­மன்றில் நெறிப்­ப­டுத்­தப்­பட்ட சாட்­சி­யங்­களில் மிக முக்­கி­ய­மா­னதும் அவ­சி­ய­மா­னது­மான சில சான்­று­களை நினை­வு­ப­டுத்த விரும்­புகின்றேன் என நீதி­மன்றில் தெரிவித்து மேலும் தனது சமர்ப்­ப­ணத்தில் இந்த ஆட்­கொ­ணர்வு மனு விசா­ர­ணையில் மனு­தா­ரர்­க­ளான கடத்­தப்­பட்ட மாண­வர்­களின் பெற்­றோர் இந்த நீதி­மன்றில் சாட்­சியம் அளிக்­கையில் தெகி­வ­ளையில் 2008 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் 17 ஆம் திகதி இரவு 10 மணி­ய­ளவில் கடத்­தப்­பட்ட சம்­ப­வத்­தையும் கடத்­தி­ய­வர்கள் திரு­கோ­ண­மலை கடற்­படை முகாமில் தடுத்து வைத்­தி­ருந்து விடு­தலை செய்­வ­தற்கு ஒரு கோடி ரூபா பணம் கேட்­ட­தா­கவும் சாட்­சியம் அளித்­துள்­ளனர்.
குற்­றத்­த­டுப்புப் பிரிவின் பொறுப்­ப­தி­கா­ரி­யாக கட­மை­யாற்­றி­ய­வரும் தற்­பொ­ழுது உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ராக கட­மை­யாற்­று­ப­வ­ரு­மான எம்.ஏ ஜய­தி­லக தனது சாட்­சி­யத்தில்,
கொழும்புக் கோட்டை நீதிவான் நீதி­மன்­றத்தில் கொழும்பு குற்றப் பிரி­வினரால் தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கின் சந்­தேக நப­ரான கடற்­ப­டையைச் சேர்ந்த லுதினன் கமாண்டர் சம்பத் முன­சிங்­க­வினால் பாவிக்­கப்­பட்ட அறை­யி­லி­ருந்து முன்னாள் கடற்­படைக் கொமாண்டரின் அடை­யாள அட்­டை, 7.62 MM 105 வெடி குண்­டுகள் 9 x 18- 32 வெடி குண்­டுகள் -9MM ரக50 வெடி குண்­டுகள் கொமர்ஷல் சம்பத் இலங்கை வங்­கி­களின் சேமிப்புப் புத்­த­கங்கள்.
காசோ­லை­கள் காணாமல் போன­வர்­களின் தேசிய அடை­யாள அட்­டைகள், காணாமல் போன­வர்­களின் கடவுச்­சீட்­டுக்கள், சோனி எரிக்சன் சிம் அட்­டைகள் உட்­பட 21 தடயப் பொருட்­களை கொழும்பு குற்றப் பிரி­வினர் கைப்­பற்றி பொலிஸ் மா அதி­பரின் உத்­த­ர­விற்­க­மைய கொழும்பு புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு பாரம் கொடுத்­த­தை­ய­டுத்து மேல­திக விசா­ர­ணை­களை தாங்கள் நடத்தி விசா­ரணை அறிக்­கை­களை கொழும்புக் கோட்டை நீதிவான் நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­துள்­ள­தா­கவும் இந்த நீதி­மன்றில் சாட்­சி­ய­ம­ளித்­துள்ளார்.
மேலும் கொழும்பு புல­னாய்வுப் பிரிவின் விசேட விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­கா­ரி­யான ரஞ்ஜித் முன­சிங்­கவின் சாட்­சி­யத்தை நெறிப்­ப­டுத்­திய பொழுது தெகி­வ­ளையில் 2008 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் 17 ஆம் திகதி ஐந்து மாண­வர்கள் கடத்தல் சம்­ப­வத்தில் கடற்­ப­டையைச் சேர்ந்த லுதினன் கமாண்டர் சம்பத் முன­சிங்க தொடர்பு பட்­டுள்­ள­மைக்கு சான்­றுகள் உள்­ள­ன­வென இந்த நீதி­மன்றில் சாட்­சியம் அளித்­த­துடன் விசா­ரணை அறிக்­கை­களை கொழும்புக் கோட்டை நீதிவான் நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­துள்­ள­தா­கவும் இந்த நீதி­மன்றில் சாட்­சி­ய­ம­ளித்­துள்ளார்
கொழும்புப் புல­னாய்வுப் பிரிவின் விசா­ரணை அதி­காரி நிசாந்­த­சில்வா இந்த விசா­ர­ணையில் மிகவும் முக்­கி­மான சாட்­சி­யாவார்.
பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்­த­சில்வா தனது சாட்­சி­யத்தில் மாண­வர்­க­ளான ரஜீவ் நாக­நா­த­ன பிரதீப் விஸ்­வ­நா­தன தில­கேஸ்­வரன் ராம­லிங்­கம் மொகமட் தினேஸ் மொகமட் சாஜின் ஆகிய ஐந்து மாண­வர்­களும் தெகி­வ­ளையில் 2008 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் 17 ஆம் திகதி இரவு கடற்­ப­டை­யி­னரால் கடத்­தப்­பட்டு கடற்­படை அதி­கா­ரி­களின் கட்­டு­ப்பாட்டில் சைத்­திய வீதியில் அமைந்­துள்ள இர­க­சி­ய­த­டுப்பு முகாமில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் இந்த கடத்தல் சம்­ப­வத்தில் கடற்­ப­டையைச் சேர்ந்த லுதினன் கொமாண்­டர் சம்பத் முன­சிங்­க எட்­டி­யா­ராச்­சி கே.பி தச­நா­ய­க ரண­சிங்க ஆராச்­சி சுமித் ரண­சிங்­க ஆகி­யோ­ரது கட்­டுப்­பாட்டில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் இந்த நீதி­மன்றில் சாட்­சியம் அளித்­துள்ளார்.
மேலும் தனது சாட்­சி­யத்தில் இந்தச் சம்­ப­வத்தை பற்­றிய விட­யங்­களை தெரிந்த சாட்­சிகள் மட்­டு­மின்றி கடற்­ப­டையில் சேவை புரிந்த சில சாட்சிகளையும் விசாரணை செய்தமை மட்டுமின்றி கடத்தப்பட்ட மாணவர்களை தடுத்து வைத்திருந்த இடங்களான கொழும்புக் கோட்டையில் பிட்டுபம்பு என அழைக்கப்படும் இரகசிய தடுப்பு முகாமையும் திருகோணமலையில் கடற்படை முகாமிற்கு அருகாமையில் பாதாள சுரங்கம் போன்ற அமைப்பையுடைய இரகசியதடுப்பு முகாமுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றின் அனுமதியைப் பெற்று சாட்சியாளர்கள் 22 பேரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதாகவும் அந்த விசாரணையில் வெளிவந்த விடயங்களையே இந்த நீதிமன்றில் தெரிவிப்பதாகவும் சாட்சியம் அளித்துள்ளார்.
கொழும்பு பிர தான நீதிவான் நீதிமன்ற நீதிபதி கியான் பிலபிடிய மனுதாரர்கள் சார்பில் ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி தவராசாவின் மேலதிக சட்ட நிகழ்வுச் சமர்ப்பணத்திற்காக செப்டம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

Post a Comment

0 Comments