ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரரிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த இரு தினங்களில் பல முறை வெவ்வேறு தொலைபேசி அழைப்புகளினூடாக இவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


0 Comments