பி. முஹாஜிரீன்
அல் மீஸான் சமூக நலன்புரி அமைப்பினால் பாலமுனை ‘தானா அல் புஸைரி’ ஜூம்ஆப் பள்ளிவாயலுக்கு ரமழான் மாதத்தில் பொது மக்கள் நோன்பு திறப்பதற்கான கஞ்சி விநியோகம் செய்வதற்காக ரூபா ஒரு இலட்சம் நிதி அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.
இந்நிதியினைக் கையளிக்கும் வைபவம் நேற்று வியாழக்கிழமை (09) மாலை ‘தானா அல் புஸைரி’ ஜூம்ஆப் பள்ளிவாயலில் நடைபெற்றது. பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் எஸ். லாஹீர் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அல் மீஸான் சமூக நலன்புரி அமைப்பின் நிருவாக சபை உறுப்பினரும் முன்னாள் செயலாளருமான எம். பரீட் கலந்து கொண்டு இதற்கான காசோலையினை கையளித்தார்.
கட்டாரில் தொழில் புரியும் பாலமுனைப் பிரதேசத்தவர்களை அங்கத்தவர்களாகக் கொண்டு இயங்கும் அல் மீஸான் சமூக நலன்புரி அமைப்பின் தலைவர் எஸ்.ரி.ஏ. ஹ_தைபிடம் பள்ளிவாயல் நிருவாக சபையினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய அங்கத்தவர்களின் உதவியுடன் சேகரிக்கப்பட்ட இந்நிதி ரமழான் மாத கஞ்சி விநியோகம் செய்வதற்காக வழங்கட்டது.
இந்நிகழ்வில் தானா அல் புஸைரி ஜூம்ஆப் பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையின் செயலாளர் என். எம். றிஸ்வான், முன்னாள் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் ஏ.பி. இஸ்மாலெவ்வை, அல் மீஸான் சமூக நலன்புரி அமைப்பின் சார்பில் மௌலவி யுடு. மௌஜூத் மற்றும் எம். ஆதம்லெவ்வை ஆகியோர் கலந்து கொண்டனர்.



0 Comments