Subscribe Us

சின்ஹலே கொடிகளுடன் சிலர் ஊடக நிறுவனத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்


“சின்ஹலே கொடி” ஐ இனவாதிகளின் கொடி என கோடிட்டுக்காட்டும் முயற்சிகளில் எம்.ரீ.வி, எம்.பீ.சி ஊடக நிறுவனத்துக்கு சொந்தமான ஊடகங்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து பொதுபலசேனா அமைப்பு எம்.ரீ.வி, எம்.பீ.சி தலைமையகத்திற்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள குழுவினர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பாராளுமன்ற கட்டட தொகுதிக்கு முன்பாக அண்மையில் நடத்தப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது உபயோகித்த அதே சர்சைக்குரிய கொடிகளை ஏந்தியவாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 


Post a Comment

0 Comments