அரச குடும்பத்தை உருவாக்குவது எனது நோக்கமல்ல நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தையும் அரச குடும்பமாக மாற்றுவதே எனது நோக்கமாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாட்டில் இன்று சட்டம் மதிக்கப்படுகின்றது என்பதை இத்தேர்தல் நடவடிக்கைகள் உணர்த்தியுள்ளது. இதற்கு ஜனவரி 8 ஆம் திகதி இடம்பெற்ற நல்லாட்சிக்கான புரட்சியே வழிவகுத்தது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற நல்லாட்சிக்கான ஐ.தே.முன்னணியும் பிரஜைகள் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டணிக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்தும் நிகழ்வின் பின்னர் உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
(Pix by:Udesh Ranasinha)
-Virakesari-

0 Comments