Subscribe Us

header ads

ரணிலை காப்பாற்றும் முயற்சியில் மைத்திரிபால ஈடுபட்டுள்ளாரா? டலஸ் கேள்வி


ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆட்­சியை மீண்டும் கொண்­டு­வரும் நோக்­கத்­திலும் ரணிலை காப்­பாற்றும் நோக்­கத்­தி­லுமே ஜனா­தி­பதி செயற்­ப­டு­கின்றாரா என்ற சந்­தேகம் உள்­ள­தாக ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் உறுப்­பி­னரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான டலஸ் அழ­க­ப்பெ­ரும தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைமைக் கரி­யால­யத்தில்   நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அறிக்­கை­யினால் மன­மு­டைந்த பல்­லா­யிரக் கணக்­கான நபர்­களில் நானும் ஒருவன்.

அவர் குறிப்­பிட்ட வார்த்­தைகள் மிகவும் வேத­னைக்­கு­ரி­யவையாகும். எமது கட்­சிக்குள் சதி செய்து யாரையும் வீழ்த்த வேண்­டிய அவ­சியம் எமக்கு எப்­போதும் இருந்­த­தில்லை. 
ஆனால் பாரா­ளு­மன்­றத்தில் மஹிந்த மற்றும் அவ­ரது அணி­யினால் குழப்­பங்கள் நடக்­க­வி­ருந்­ததன் கார­ணத்­தினால் தான் பாரா­ளு­மன்­றத்தை கலைத்­த­தாக தெரி­வித்­துள்ளார். இந்த கருத்­தா­னது ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் அனைத்து உறுப்­பி­னர்­க­ளுக்கும் விழுந்த பாரிய அடி­யாகும்.
அதேபோல் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை காப்­பாற்­றவே பாரா­ளு­மன்­றத்தை கலைத்­த­தாக ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார். 
மூன்றில் இரண்டு பெரும்­பான்மை அதி­காரம் உள்ள ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியால் உரு­வாக்­கப்­பட்ட அதி­காரம் பொருந்­திய பாரா­ளு­மன்­றமே நடை­மு­றையில் இருந்­தது. 
இந்த பாரா­ளு­மன்­றத்தை கலைத்து பிர­த­மரை காப்­பாற்ற முடி­வெ­டுத்­துள்­ளமை மோச­மா­ன­தொரு செயற்­பா­டாகும். இந்த விடயம் தொடர்பில் கட்­சியின் மத்­திய குழுக் கூட்­டத்தில் நாம் கேள்வி எழுப்­புவோம். 

அதேபோல் உலகில் எங்கும் இல்­லாத ஒரு சம்­பவம் இலங்­கையில் நடை­பெற்­றுள்­ளது. எதிரணித் தலை­வரை காப்­பாற்ற ஜனா­தி­பதி முயற்­சி­களை எடுத்­துள்ளார் என்­பதை கேட்கும் போது தாங்­கிக்­கொள்ள முடி­யா­துள்­ளது. இவ்­வா­றா­ன­தொரு சம்­ப­வத்தை நான் வேறு எந்­த­வொரு நாட்­டிலும் கேட்­ட­தில்லை.
சில­வேளை ஜனா­தி­பதி ஏதேனும் கார­ணத்தை கருத்­தில்­கொண்டு இவ்­வாறு தெரி­வித்­தாரோ தெரி­ய­வில்லை. ஆனால் இவ­ரது கருத்து ஐக்­கிய தேசியக் கட்­சியை பாது­காக்க எடுத்த நட­வ­டிக்­கையா என்று அனைவர் மத்­தியில் இருக்கும் சந்­தே­கத்தைப் போல் எம்­மி­டமும் அந்த சந்­தேகம் எழுந்­துள்­ளது. 
அதற்­கான தெளிவை நாம் மத்­திய குழுக் கூட்­டத்தில் பெற்­றுக்­கொள்ள முடியும் என நினைக்­கின்றேன்.

Post a Comment

0 Comments