கடல் உயிரியலாளர்கள், கடல் சார் பொறியியலாளர்கள் மற்றும் சூழலியலாளர்களைச் கொண்ட குழுவொன்று சுமார் 300 பேர் வசிக்கக் கூடிய மிதக்கும் நகரொன்றுக்கான திட்டமொன்றை முன்வைத்துள்ளது.
இந்தத் திட்டத்துக்கு சர்வதேச இணையத்தள மூலமான கட்டண முறைமையான பேபாலின் ஸ்தாபகர் பீற்றர் தியல் ஆதரவளித்துள்ளார்.
மேற்படி மிதக்கும் நகரை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் ஸ்தாபிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும் இந்நகரை எங்கு ஸ்தாபிப்பது என்பது குறித்து இதுவரை தீர்மானம் எடுக்கப்படவில்லை.

0 Comments