இன்று மாலை ரமழான் நோன்பு திறக்கும் நிகழ்வு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் நகர மண்டபத்தில் கோலாகலமான முறையில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஏற்பாடு செய்த இப்பெரும் நிகழ்வுக்கு காத்தான்குடியின் சகல பாகங்களில் இருந்தும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக் மற்றும் உலமாக்கள் ஊர் பிரமுகர்கள் என்று பலரும் கலந்து சிறப்பிதமை குறிப்பிடத்தக்கது.







0 Comments