Subscribe Us

header ads

பொலிஸ் திணைக்­க­ளத்தின் பெளத்த மற்றும் மத­விவ­கார சங்க ஏற்பாட்டில் நாளை கொழும்பில் இப்தார் வைபவம்.


பொலிஸ் திணைக்­க­ளத்தின் பெளத்த மற்றும் மத­விவ­ கார சங்கம் வரு­டாந்தம் ஏற்­பாடு செய்து நடத்தும் நோன்பு துறக்கும் வைபவம் நாளை இடம்­பெ­ற­வுள்­ளது.
பொது ஒ­ழுங்­குகள் மற்றும் கிறிஸ்­தவ மத விவ­கார அமைச்சர் ஜோன் அம­ர­துங்க மற்றும் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் ஆகி­யோரின் தலை­மையில் இடம்­பெ­ற ­வுள்ள இந்த நோன்பு துறக்கும் வைப­வ­மா­னது, கொழு ம்பு ஒல்கொட் மாவத்­தையில் உள்ள கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதி­பரின் அலு­வ­ல­கத்தில் இடம்­பெ­ற­வுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.
புனித ரமழான் காலப்­ப­கு­தியில் நோன்பு நோற்கும் முஸ்லிம் பொலிஸ் அலு­வ­லர்­க­ளுக்கு நோன்பு மற்றும் மத வழி­பா­டு­களில் ஈடு­ப­டு­வ­தற்கு போதிய கால அவ­கா ­சம் பொலிஸ் திணைக்­க­ளத்­தினால் வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் அறிக்கை ஒன்­றூ­டாக சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளதா­வது,
இம்­முறை 2015.06.18ஆம் திகதி தொடக்கம் 2015.07.17 ஆம் திகதி வரை ரமழான் மாத­மாக கரு­தப்­ப­டு­கின்­றது. அதன்­படி தின­மொன்­றுக்கு 14 மணி நேரம் வரை இஸ்­லா­மிய பக்­தர்கள் நோன்பு நோற்­கின்­றனர்.
சூரியன் அஸ்­த­மனமாவ­தோடு அவர்கள் உண­வுண்டு நோன்பு துறப்பர். இவ்­வாறு நோன்பு துறப்­பது ”இப்தார்” என அழைக்­கப்­ப ­டு­கின்­றது.
இந்த முக்­கி­ய­மான சமய நிகழ்­வை முன்­னோக்கிக் கொண்­டு­சென்று இனங்­க­ளுக்­கி­டையே ஐக்­கி­யத்­தையும் சக­வாழ்­வையும் கட்­டி­யெ­ழுப்­பு­வது பொலிஸ் திணைக்­க­ளத்தின் நோக்­க­மாகும்.
பொது மக்கள் நல்­லு­ற­வுக்கும் குற்­றப்­ப­ய­மற்ற சமூகச் சூழலை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­த ற்கும் அனை­வ­ரு­டனும் ஒன்­றி­ணைந்து பொலிஸார் முன்­னெ­டுக்கும் செயல்­களில் ஒன்­றாக பொலிஸ் திணைக்­க­ ளத்தின் இந்த சமய அனுஷ்­டான நிகழ்­வான ”இப்தார்” நிகழ்வை கருத முடியும்.
அதன்­படி இம்­மு­றையும் பொது ஒழுங்­குகள் மற்றும் கிறிஸ்­தவ மத விவ­கார அமைச்சர் ஜோன் அம­ர­துங்க மற்றும் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் ஆகி­யோ­ரது தலை­மையில் இந்­நி­கழ்வு இடம்­பெ­ற­வுள்­ளது. இலங்­கையின் இஸ்­லா­மிய நாடு­களின் தூதுவர்கள், அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், அமைச்­சுக் ­களின் செய­லா­ளர்கள் மற்றும் இஸ்­லா­மிய பொலிஸ் அலுவ­லர்கள், இளைப்­பா­றிய பொலிஸ் அலு­வ­லர்கள் ஊடக பிரதிநிதிகள் உட்­பட பல்­ துறை பிர­மு­கர்­களும் இதில் கலந்­து­கொள்வர். நாளை 24ஆம் திகதி திகதி புதன் கிழமை பி.ப 5.00 மணி தொடக்கம் இல.331 ஒல்கொட் வீதியில் அமைந்திருக்கும் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபரின் அலுவலக கட்டட தொகுதியின் 4ஆம் மாடியில் மிகச் சிறப்பான முறையில் இந்த நோன்பு துறக் கும் நிகழ்வுகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்.
என குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments