Subscribe Us

header ads

அடக்க முடியாத வாயு தொல்லை





என்னவென்று கேட்டால் வாய்வு பிடிப்பு என்பார்கள். வாய்வுப்பிடிப்பு, உடலில் எங்கு வேண்டுமானாலும் வரும் என்ற குருட்டுத்தனமான நம்பிக்கை நம்மிடையே உண்டு. உண்மையில் உடலில் சுவாசப் பை, உணவுப்பாதை என்ற இந்த இரண்டில் மட்டுமே காற்று இருக்கிறது. இதைத்தவிர உடலில் வேறு எங்கும் எந்த பாகத்துக்கும் காற்று போகாது. போகவும் முடியாது.

அப்படி ஒரு வேளை போவதாக வைத்துக்கொண்டால், உணவுப்பாதையை ஓட்டை போட்டு சென்றாலும், வேறு எங்கும் போக முடியாது. போனாலும், உடலின் உள்உறுப்புகளான இதயம், சுவாசப் பை ஆகியவற்றைதான் அழுத்தும். இது மரணத்தில் முடியக்கூட வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இதுபோன்ற நிலை எப்போது ஏற்படும் என்றால் குண்டடிபடுவதன் மூலம் மட்டுமே உண்டாகும்.



அதற்கும் வயிற்றுக்கும் நேரடி தொடர்பு எதுவும் இல்லை. அப்படி இருக்கையில் உணவுப்பாதைக்குள் காற்று எப்படி வருகிறது? இதற்கு இரண்டு காரணங்களை மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஒன்று நாம் சாப்பிடும்போதே உணவோடு சேர்ந்து காற்றும் உணவு பாதைக்குள் செல்கிறது. இரண்டாவது, இரைப் பைக்குள் போய் விழும் உணவை அமிலங்கள் தாக்கும்போது, அங்கே பல ரசாயன மாற்றங்கள் நிகழ்ந்து ஹைட்ரஜன், சல்பைட், மீத்தேன், கரியமில வாயு போன்ற வாயுக்களை உண்டாக்குகின்றன.





Post a Comment

1 Comments