Subscribe Us

header ads

துளசியும் மருத்துவக் குணங்களும்


நாள்­தோறும் துள­சியை சிறி­த­ளவு சாப்­பிட்டு வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்­பான பிரச்­ச­னைகள் வராது.
ஜீரண சக்­தியும், புத்­து­ணர்ச்­சி­யையும் துளசி இலை மூலம் பெறலாம். வா‌ய் து‌ர்­நா‌ற்­ற‌த்­தையு‌ம் போ‌க்கு‌ம்.நமது உட­லுக்­கான கிருமி நாசி­னி­யாக துள­சியை உட்­கொள்­ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீர­ழிவு வியாதி நம்மை நாடாது.
உடலின் வியர்வை நாற்­றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்­தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும்.
தோலில் பல நாட்­க­ளாக இருக்கும் படை, சொரி­க­ளையும் துளசி இலையால் குண­ம­டையச் செய்ய முடியும். துளசி இலையை எலு­மிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்­சொரி மறையும்.
சிறுநீர் கோளாறு உடை­ய­வர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்­கொண்டு வர வேண்டும். கூடவே உட­லுக்குத் தேவை­யான அள­விற்கு தண்­ணீரும் பருகி வர பிரச்­சினை சரி­யாகும்.
மருத்­துவக் குணங்கள்
சளி, இருமல், வறட்டு இருமல் போன்­ற­வற்­றுக்கும் மருந்­தாகும்.தொற்­று­நோய்­களை எதிர்க்கும்.ஜீரண சக்­தியை அதி­க­ரித்து பசியை அதி­க­ரிக்கும். வயிற்றுப் பொருமலைத் தணிக்கும்.துளசி விதை ஆண்மையை அதிகரிக்கும்.-vk-

Post a Comment

0 Comments