சிலாபம் கொஸ்வத்தை பகுதியில் தாய் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் கிணற்றினுள் குதித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் ஒருவயது குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கிணற்றினுள் இருந்து காப்பாற்றப்பட்ட தாயும் ஏழு வயது சிறுவனும் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
நேற்று (12) நள்ளிரவு குறித்த தாய் தனது இரண்டு பிள்ளைகளுடன் கிணற்றினுள் குதித்துள்ளார்.
எவ்வாறாயினும் இதற்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.


0 Comments