Subscribe Us

header ads

அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் கைது செய்யப்படுகின்றார்கள்: மகிந்த


எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் அனைவரையும் கைது செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாக  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
ஹிக்கடுவ பிரதேச விகாரையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து அவர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் நாட்களில் கடந்த அரசாங்கத்தில் செயற்பட்ட அதிகாரிகளை கைது செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் தயாராக உள்ளதென முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
யாரேனும் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டால்,அவர்களை உடனடியாக கைது செய்துவிடுவார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments