Subscribe Us

header ads

6 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தானில் பிறநாட்டு கிரிக்கெட் அணி : வீரர்களுக்கு பலத்த பாதுகாப்பு


ஆறு ஆண்­டு­க­ளுக்குப் பிறகு ஒரு சர்­வ­தேச அணி பாகிஸ்­தா­னுக்கு கிரிக் கெட் போட்டியில் விளையாட சென்றுள்ளது. 

நேற்று காலை 1.45 மணிக்கு சிம்­பாப்வே வீரர்கள் லாகூர் விமான நிலை­யத்தில் வந்­தி­றங்­கி­னார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் வர­லாற்றில் இது முக்­கிய நிகழ்வு.
விமான நிலை­யத்­தி­லி­ருந்து வீரர்கள் தங்கும் ஐந்து நட்­சத்­திர விடுதி வரை ஆயி­ரக்­க­ணக்­கான பொலிஸார் பாது­காப்பு அளித்­தார்கள். 16 வீரர்கள், 9 அணி அதி­கா­ரிகள், 5 கிரிக்கெட் சபை நிர்­வா­கிகள் ஆகியோர் அடங்­கிய குழு, பாகிஸ்­தா­னுக்கு வந்­துள்­ளது. சிம்­பாப்வே அணி, 3 ஒருநாள் போட்­டிகள் மற்றும் 2 இருபதுக்கு 20 போட்­டி­களில் விளையாடவுள்ளது.
பாது­காப்பு கார­ணங்­க­ளுக்­காக, இந்த கிரிக்கெட் தொட­ருக்கு நடு­வர்­களை நிய­மிக்க, சர்­வ­தேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) மறுப்பு தெரி­வித்­து­விட்­டது. இதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு சொந்­த­மான நடு­வர்­களை நிய­மித்­துள்­ளது.
2009இல் பாகிஸ்­தானில் சுற்றுப் பயணம் மேற்­கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி­யினர் மீது, லாகூரில் வைத்து பயங்­க­ர­வா­திகள் தாக்­குதல் நடத்­தினர். இதன்பின், எந்த அணியும் பாகிஸ்­தா­னுக்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொள்­ள­வில்லை.
6 ஆண்­டுகள் கழித்து ஒரு சர்­வ­தேச அணி, பாகிஸ்­தா­னுக்குச் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்­டி­ருப்­பது மற்ற அணிகளிடம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட்சபை நம்பிக்கை தெரிவித்துள்ளது.-VK-

Post a Comment

0 Comments