Subscribe Us

header ads

செல்லுக்கு ஆபாச SMS அனுப்புகிறார்கள்; தாங்க முடியவில்லை உயிரை விடுகிறேன்...


இந்தியா:
‘எனது செல்போனுக்கு தினமும் புதிய புதிய செல்போன் எண்களில் இருந்து ஆபாச எஸ்.எம்.எஸ். வருகின்றன. இதனால் மனம் உடைந்த தற்கொலை செய்து கொள்கிறேன்’ என்று கர்நாடகாவை சேர்ந்த மருத்துவ மாணவி எழுதிவைத்திருந்த உருக்கமான கடிதம் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளது.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்தவர் சுவாதி (22). இவர் மைசூரு பன்னிமண்டபாவில் உள்ள ஜே.எஸ்.எஸ். மடத்திற்கு சொந்தமான மருத்துவக் கல்லூரியில் ‘பி‘ பார்மசி 3ஆம் ஆண்டு படித்து வந்தார். இதனால் அவர் கல்லூரிக்கு சொந்தமான தங்கும் விடுதியில் தங்கியிருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நீண்ட நேரம் ஆனபோதிலும் சுவாதி தங்கியிருந்த அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த சகமாணவிகள், சுவாதி தங்கியிருந்த அறையின் கதவை தட்டிப்பார்த்துள்ளனர். இருப்பினும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளனர். அப்போது சுவாதி தனது அறையின் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்தார்.
தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சுவாதி எழுதிவைத்திருந்த உருக்கமான கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
அந்த கடிதத்தில், “எனக்கு நகர வாழ்க்கை பிடிக்கவில்லை. இந்த கல்லூரியிலும் படிக்கும் மாணவ–மாணவிகளுடன் என்னால் அனுசரித்து செல்ல முடியவில்லை. எனது செல்போனுக்கு தினமும் புதிய புதிய செல்போன் எண்களில் இருந்து ஆபாச எஸ்.எம்.எஸ். வருகின்றன. இதனால் மனம் உடைந்த நான் தற்கொலை செய்து கொள்கிறேன். அப்பா, அம்மா, அண்ணன், தம்பி மற்றும் தோழிகள் என்னை மன்னித்துவிடுங்கள். எனது முடிவு மூலம் உங்களுக்கு பெரிய துயரத்தை கொடுத்துவிட்டு செல்கிறேன்” கூறப்பட்டிருந்தது.
கல்லூரி விடுதியில் மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments