கொழும்பு,
கொம்பனித்தெருவில் இடம்பெற்ற மோதலில் வொக்ஷோல் வீதியைச் சேர்ந்த 30 வயதான
சியாம் நளின் என்பவர் கொல்லப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ்
தரிப்பிடத்தில் இரண்டு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்கு வாதம்
கைகலப்பாக மாறி, இறுதியில் கொலையில் முடிந்துள்ளது என்று பொலிஸார்
தெரிவித்தனர்.
இந்த
சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் அதேயிடத்தை சேர்ந்த 45
வயதான ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார்,
சந்தேகநபரை, கோட்டை நீதவான் முன்னிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.


0 Comments