Subscribe Us

header ads

தலையை ஊடுருவிய 3 அங்குல நீள ஆணி

தனது வீட்டை அலங்­க­ரிக்கும் நட­வ­டிக்­கைக்­காக வெட்டும் உப­க­ர­ணத்தைப் பயன்­ப­டுத்­திய நப­ரொ­ருவர்இ அந்த உப­க­ர­ணத்­தி­லி­ருந்து பாய்ந்த ஆணி தனது தலையை ஊடு­ரு­வி­யி­ருப்­பதை அறி­யா­தி­ருந்த சம்­பவம் சீனாவின் ஜியாங்ஸு மாகா­ணத்தில் இடம்­பெற்­றுள்­ளது.
 
யாங் யி குயி (55 வயது) என்ற மேற்­படி நபர் புதுவருட தினத்­தை­யொட்டி தனது வீட்டை அலங்­க­ரிக்கும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்த போதுஇ அவரால் இயக்கப்பட்ட இயந்­தி­ரத்­தி­லி­ருந்து பாய்ந்த 3 அங்­குல நீள­முள்ள ஆணி அவ­ரது இடது கட்கு­ழிக்கு அருகில் மண்­டை­யோட்டை ஊடு­ரு­விச்­சென்­றதுள்ளது.
 
தனது மண்­டை­யோட்டை ஆணி துளைத்துச் சென்­றி­ருப்­பதை அறி­யாத யாங்­ யி­ குயிஇ கடும் சுக­வீ­னத்­துக்கு உள்­ளா­கிய நிலையில் நன்­ஜி­யாங்­கி­லுள்ள மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்டார்.
 
இத­னை­ய­டுத்து அவ­ருக்கு மேற்­கொள்­ளப்­பட்ட "சிரி" ஊடு­காட்டும் பரி­சோ­த­னையின் போதே அவ­ரது மண்­டை­யோட்டை ஆணி ஊடு­ரு­வி­யி­ருப்­பதை மருத்­து­வர்கள் கண்­ட­றிந்­துள்­ளனர்.
 
தொடர்ந்து யாங் யி குயியின் மண்­டை­யோட்டில் ஊடு­ரு­வி­யி­ருந்த ஆணி அறுவைச்சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டதுடன் அவரது கண் பார்வை பாதிப்புக்கு­ள்ளா­காது தப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments