(எம்.எம்.ஜபீர்)
ஸ்ரீ லங்கா முஸ்லிம் நலன்புரிச் சங்கத்தின்
ஏற்பாட்டில் சிறந்த சமூக சேவையாளர்களுக்கான விருது வழங்கி கௌரவிக்கும்
நிகழ்வு அண்மையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் நலன்புரிச் சங்கத்தின் தலைவர்
பைஸால் பளீல் தலைமையில் கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சில்
நடைபெற்றது.
இதன்போது கல்முனை மாநகர சபை உறுப்பினரும் லங்கா
சதோச நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்
உயர் பீட உறுப்பினருமான சீ.எம். முபீத் அவர்களின் சகோதரருமான
சீ.எம்.ஹலீம் அவர்களுக்கு சிறந்த சமூக சேவையாளருக்கான விருதினை கைத்தொழில்
மற்றும் வணிகத்துறை அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கரஸின் தேசியத்
தலைவருமான றிஸாட் பதியுதீன் அவர்களால் வழங்குகி கௌரவிக்கப்படுதையும், ஸ்ரீ
லங்கா முஸ்லிம் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் பைஸால் பளீல் அருகில்
நிற்பதையும் படத்தில் காணலாம்.


0 Comments