Subscribe Us

header ads

நாட்டின் ஐக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்வோம்!- எதிர்க்கட்சித் தலைவர்


நாட்டின் ஐக்கியத்தை பாதுகாத்துக் கொள்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
தமிழ் சிங்கள புதுவருட முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புதுவருடப் பிரார்த்தனைகளில் மெய்யான அபிவிருத்தி மற்றும் நாட்டின் ஐக்கியம் ஆகியனவற்றை பாதுகாப்பது முதன்மையாக அமைய வேண்டும்.
புதுவருட காலத்தில் உறவினர் நண்பர்களுடன் அன்பைப் பகிர்ந்து கொள்வோம்.
அனைத்து இன சமூகங்களுடனும் இணைந்து புதுவருடத்தைக் கொண்டாடுவோம்.
மதிநுட்பத்துடன் செயற்படுவதன் மூலம் நாட்டில் நிலவி வரும் வியாகூல நிலைமைகளிலிருந்து மக்களை மீட்டெடுக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தனது புதுவருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments