Subscribe Us

header ads

மஹிந்தவின் ஆதரவாளர்கள் மைத்திரிபாலவுடன் இரகசிய பேச்சு.


ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கிவந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இரகசிய பேச்சுக்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்தரப்பு ஒன்றை கோடிட்டு இலங்கையின் அரசாங்க பத்திரிகையான டெய்லி நியூஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
எனினும் இந்த ஐவரும் யார் என்பதை அந்த செய்தியில் குறிப்பிடவில்லை.
19வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் உயர்நீதிமன்றம் தெளிவான விளக்கம் ஒன்றை வழங்கிய நிலையிலேயே இந்த இரகசிய பேச்சு நடத்தப்படுவதாக டெய்லி நியூஸ் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

0 Comments