Subscribe Us

header ads

'முஹம்மது நபி எனது கனவில் தோன்றினார் - பொய்யன் பக்தாதி விடுத்துள்ள அறிக்கை

-சுவனப் பிரியன்-


ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பு அமெரிக்காவின் கைக்கூலி என்று தொடர்ந்து சொல்லி வருகிறோம். ஐஎஸ்ஐஎஸின் தலைவன் பக்தாதி சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளான். அது என்ன அறிக்கை?

'நபிகள் நாயகம் எனது கனவில் தோன்றி 'மசூல் நகரத்திலிருந்து வெளியேறி விடு' என்று சொன்னார். எனவே போராளிகள் தாக்குதலை கைவிட்டு மசூல் நகரத்திலிருந்து வெளியேறவும்' என்ற அறிக்கையே அது.

இவனைப் பொறுத்த வரையில் அமெரிக்க ஆயுத வியாபாரிகள் என்ன கட்டளையிடுகிறார்களோ அதனை செயல்படுத்தக் கூடியவன். தற்போது ஆயுத வியாபாரம் முடிந்து விட்டது. பெட்ரோல் வளங்களையும் கொள்ளையடித்தாகி விட்டது. இனி ஐஎஸ்ஐஎஸ் அவசியமில்லை என்ற முடீவுக்கு அவர்கள் வந்ததாலேயே திடீரென்ற இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய பார்வையில் நபிகள் நாயகத்தை யாரெல்லாம் நேரில் கண்டார்களோ அவர்கள் தான் கனவிலும் காண முடியும். நபிகள் நாயகத்தின் காலத்திய ஆட்கள் யாரும் தற்போது உயிரோடு இல்லை. நபிகள் நாயகம் எந்த தோற்றத்தில் இருப்பார்கள் என்ற அறிவும் இவனுக்கு கிடையாது. ஆக திட்டமிட்டு பொய் சொல்கிறான். இஸ்லாத்தை நன்கு விளங்கியிவர்கள் இவனது காமெடியை கேட்டு சிரிக்காமல் இருக்க மாட்டார்கள். பொய்களை அதிக நாட்கள் மூடி வைக்க முடியாது என்பதற்கு ஐஎஸ்ஐஎஸ் ஒரு சிறந்த உதாரணம். அதன் தலைவன் பக்தாதியும் ஒரு நல்ல உதாரணம்.

Post a Comment

0 Comments