Subscribe Us

header ads

இலங்கை கிரிக்கட் ரசிகர்களின் பொன்நாள்… ஒரு சுவாரஸ்ய பிளாஷ்பேக்.

(எம்.எம்.சில்­வெஸ்டர்)


11ஆவது உலகக் கிண்ணப் போட்­டி கள் மிகவும் சூடு பிடித்துக் கொண்­டி­ருக்கும்
இத்­த­று­வாயில், கிரிக்கெட் ரசி­கர்கள் அனை­வ­ராலும் விவா­தத்­திற்கும் எதிர்­பார்ப்­பிற்கும் உள்­ளா­கி­யி­ருக்கும் ஒரே­யொரு விடயம் என்­ன­வெனில், ‘எந்த அணி உலகக் கிண்­ணத்தை கை ப்­பற்­றப்­போ­வது’ என்­ப­தாகும். தாம் விரும்பும் அணி உலகக் கிண்­ணத்தை சுவீ­க­ரிப்­ப­தற்­காக தமக்கு விருப்­ப­மான அணிக்­கான வாழ்த்­துக்­க­ளையும் ஆத­ர­வு­க­ளையும் கிரிக்கெட் ரசி­கர்கள் தற்­போது சமூக வலைத்­த­ளங்கள் ஊடாக வழங்கி வருகி­றார்கள். இது­த­விர சமூக வலைத்­த­ளங்­களில் காணப்­படும் கருத்துக் கணிப்­பு­களில் முந்­தி­ ய­டித்­துக்­கொண்டு வாக்­கு­களை பதி­வு­செய்தும் வரு­கி­றார்கள்.

இது இவ்­வா­றி­ருக்க எதிர்­வரும் 17 ஆம் திகதி இலங்கை கிரிக்­கெட்­டுக்கு ஓர் மகத்­தான நாளாகும். இந்நாள் இலங்­கையர் அனை­வ­ருக்கும் சரித்­திர முக்­கி­யத்­து­வ­மிக்க நாளாகும். ஆம், இற்­றைக்கு 19 வரு­டங்­க­ளுக்கு முன்பு, அதா­வது 1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி அர்­ஜுன ரண ­துங்க தலை­மை­யி­லான இலங்கை அணி உலகக் கிண்­ணத்தை சுவீ­க­ரித்த பொன் நாளாகும். அன்­றைய தினம் உலக வரை­ப­டத்தில் நமது இலங்கை திரு­நாட்டை உல­கத்தார் அனை­வரும் தேடி­னார்கள் என்று கூறினால் தவ­றி ல்லை. இக்­காலப் பகு­தியில் கத்­துக்­குட்­டி­யாக வலம் வந்­து­கொண்­டி­ருந்த இலங்கை அணி முத­லா­வது உலகக் கிண்ணத் தொடர் ஆரம்­பிக்­கப்­பட்டு ஏறக்­கு­றைய இரு தசாப்த இடை­வெ­ள யில் உலகக் கிண்­ணத்தை கைப்­பற்­றி­ய­மை­யா­னது இலங்கை வாழ் மக்கள் அனை­வ­ருக்கும் பெரு­மை­யான விட­ய­மாகும்.

1996 ஆம் ஆண்டு இலங்கை கிரிக் கெட் அணி உலகக் கிண்­ணத்தை வென்ற அந்த பொன்­னான தரு­ணத்தை மீண்டும் ஒரு முறை எண்­ணிப்­பார்ப்போம்.

6 ஆவது உலகக் கிண்ணத் தொடர் 1996 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 14ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 17ஆம் திகதி வரை நடை­பெற்­றது. இத் தொடரை இலங்கை, இந்­தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கூட்­டாக இணைந்து நடத்­தின. இதன் ஏ குழு வில் இலங்கை, இந்­தியா,
அவுஸ்­தி­ரே­லியா, மேற்­கிந்­தியத் தீவுகள், ஸிம்­பாப்வே, கென்யா ஆகிய 6 அணி­ களும் பி குழுவில் பாகிஸ்தான், இங்­கி­லாந்து, நியூ­ஸி­லாந்து, தென் ஆபி­ரிக்கா, ஐக்­கிய அரபு இராச்­சியம், நெதர்­லாந்து ஆகிய 6 அணி­களும் என மொத்­த­மாக 12 அணிகள் பங்­கு­கொண்­டன.

இலங்­கையில் காணப்­பட்ட உள்­நாட்டு கல­வரம் கார­ண­மாக அவுஸ்­தி­ரே­லியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் கொழும்பில் விளையாட வில்லை. இதனால் இப்­போட்­டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்­ற­தாக அறி­விக்­கப்­பட்­டது.

ஸிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 6 விக் கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இதன் பின்னர் இந்­திய அணியை இலங்கை அணி டெல்லி பெரோசா கொட்லா மைதா­னத்தில் எதிர்­கொண்­டது. இப்­போட்­டியில் இலங்கை அணி இந்­திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்­தி­யது. இப்­போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய இந்­தியா 50 ஓவர்கள் நிறைவில் 3 விக்­கெட்­டு­களை இழந்து 271 ஓட்­டங்­களை பெற்­றுக்­கொண்­டது. பதி­லுக்குத் துடுப்­பெ­டுத்­தா­டிய இலங்கை அணி 48.4 ஓவர்­களில் 4 விக்­கெட்­டு­களை மாத்­திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்­தது.

இலங்கை அணி தனது குழுவில் அங்கம் வகித்­தி­ருந்த ஆபி­ரிக்க நாடான கென்யா அணி­யுடன் கண்டி அஸ்­கி­ரிய மைதா­னத்தில் விளை­யா­டி­யது. இப்­போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்­கெட்­டு­களை இழந்து 398 ஓட்­டங்­களைப் பெற்­றது. இந்த மொத்த ஓட்ட எண்­ணிக்­கை­யா­னது சர்­வ­தேச ஒருநாள் அரங்கில் அணி­யொன்­றினால் பெறப்­பட்ட அப்­போ­தைய அதி­கூ­டிய மொத்த ஓட்ட சாத­னை­யாக அமைந்­தது. இப்­போட்­டியில் அர­விந்த டி சில்வா 145 ஓட்­டங்­களை பெற்­றுக்­கொண்டார்.

இங்கிலாந்து அணிக்கெதிரான காலிறுதிப் போட்டியில் இலங்கை அணி ஐந்து விக்கெட்டுகளால் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. அரை­யி­றுதிப் போட்­டி யில் மிகவும் பலம் வாய்ந்த இந்­திய அணியை இலங்கை அணி எதிர் ­கொண்­டது. அதுவும் அவர்­க­ளது சொந்த மண்ணில் ஆயி­ரக்­க­ணக்­கான இந்­திய ரசி­கர்­களின் முன்­னி­லையில் இடம்­பெற்­றது. இப்­போட்டி இந்­தி­யாவின் கொல்­கத்­தாவின் ஈடன் கார்டன் மைதா­னத்தில் மார்ச் 13 ஆம் திக­தி­யன்று நடை­பெற்­றது.

இதில் முத­லா­வ­தாக துடுப்­பெ­டுத்­தா­டிய இலங்கை அணி 50 ஓவர்­களில் 8 விக்­கெட்­டு­களை இழந்து 251 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது. பதி­லுக்குத் துடுப்­பெ­டுத்­தா­டிய இந்­திய அணி 98 ஓட்­டங்­க­ளுக்கு ஒரு விக்­கெட்டை மாத்­திரம் இழந்து மிகவும் ஸ்திர­மான நிலையில் காணப்­பட்­டது. எனினும் இலங்கை பந்­து­வீச்­சா­ளர்­களின் நேர்த்­தி­யான பந்து வீச்­சினால் மேலும் 22 ஓட்­டங்­களை பெறு­வ­தற் குள் 7 விக்­கெட்­டு­களை இழந்து தடு­மாற்­றத்தை எதிர்­கொண்­டது. இதன்­போது 34.1 ஓவர்­களில் 8 விக்­கெட்­டு­ களை இழந்து 120 ஓட்­டங்­களை பெற்­றி­ருந்­தது. இக்­கட்­டான நிலை­யி­ லி­ருந்­வே­ளையில் இந்­திய அணி தோல்வி அடை­வதை விரும்­பாத சில இந்­திய கிரிக்கெட் ரசி­கர்கள் களத்­த­டுப்பில் ஈடு­பட்­டி­ருந்த இலங்கை வீரர்கள் மீது போத்­தல்­க­ளாலும், பழ ங்­க­ளாலும் வீசி அடித்து இடை­யூ­று­களை விளை­வித்­தனர். இதனை கட்­டு ப்­ப­டுத்த முடி­யா­ததன் கார­ண­மாக இப்­போட்­டியில் இலங்கை அணி வெற்­ற­தாக போட்­டியின் மத்­தி­யஸ்தர் அறி­வித்தார். இதன் மூலம் உலகக் கிண்ண கிரிக்கெட் வர­லாற்றில் உலகக் கிண்ண இறுதிப் போட்­டிக்கு இலங்கை அணி தகுதி பெற்ற முதல் சந்­தர்ப்­ப­மாக இது அமைந்­தது.

ஆறா­வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி 1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் திக­தி­ பாகிஸ்­தானின் லாஹூர் கடாபி மைதா­னத்தில் நடை­பெற்­றது.
இப்­போட்­டியில் அர்­ஜுன ரண­துங்க தலை­மை­யி­லான இலங்கை அணியும் மார்க் டெய்லர் தலை­மை­யி­லான அவுஸ்­தி­ரே­லிய அணியும் மோதிக்­கொண்­டன.

இப்­போட்­டியில் நாணயச் சுழற்­சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்­த­லைவர் அவுஸ்­தி­ரே­லிய அணியை முதலில் துடுப்­பெ­டுத்­தாடப் பணித்தார். இதன்­படி முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய அவுஸ்­தி­ரே­லிய அணி 50 ஓவர்­களில் 7 விக்­கெட்­டு­களை இழந்து 241 ஓட்­டங்­களை பெற்­றுக்­கொண்­டது.

பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய இல ங்கை அணியின் அதி­ரடி ஆரம்ப வீரர்­க­ளான சனத் ஜய­சூ­ரிய மற்றும் ரொமேஷ் களு­வித்­தா­ரன ஜோடி கள ­மி­றங்­கி­யது. இவ்­வி­ரு­வரும் வெகு­ வி­ரைவில் ஆட்­ட­மி­ழந்துச் சென்­ற மை இலங்கை ரசி­கர்­களை கவ­லை­யடையச் செய்­தது. இதன் பின்பு ஹசங்க குரு­சிங்க மற்றும் அர­விந்த சில்வா ஜோடி நிதானம் கலந்த ஆக்­ரோ­ஷத்­துடன் விளை­யா­டியது. இலங்கை அணியின் மொத்த ஓட்ட எண்­ணிக்கை 148 ஆக இருந்­த­போது ஹசங்க குரு­சிங்க 65 ஓட்­டங்­க­ளுடன் வெளி­யே­றினார்.

இதன் பின்னர் ஜோடி சேர்ந்த அணி த்­த­லைவர் அர்­ஜுன மற்றும் உப அணித்­த­லைவர் அர­விந்த ஆகியோர் பொறுப்பை உணர்ந்து விளை­யா­டினர். இவர்­க­ளி­ரு­வரும் சிறப்­பாக துடுப்­பெ­டுத்­தாடி அவுஸ்திரேலிய பந்து வீச் சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினர். இலங்கை அணி 46.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத் திரம் இழந்து 244 ஓட்டங்களைப் பெற்று 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று உலகக் கிண்ணத்தை முதன் முதலாக சுவீகரித்தது. அரவிந்த டி சில்வா ஆட்டமிழக்காமல் 107 ஓட்டங்களையும் அர்ஜுன 47 ஓட்டங் களையும் பெற்றுக் கொடுத்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக அர விந்த டி சில்வா தெரிவானதுடன் தொடரின் நாயகனாக சனத் ஜயசூரிய தெரிவானார்.

அதுவரை காலமும் உலகக் கிண்ணத் தொடரை நடத்திய நாடொன்று கிண்ணத்தை வென்றதில்லை என்ற சரித்திரத்தை இலங்கை கிரிக்கெட் அணி மாற்றியமைத்தது. அதுவும் போட்டியை முதன்முதலாக ஏற்பாடு செய்த நாடொன்று உலகக் கிண்ணத்தை வென்று முத்திரை பதித்தது இலங்கை.

Post a Comment

0 Comments