Subscribe Us

header ads

மாற்றம் வேண்டும்


புதிய தேர்தல் முறை­மையை மாற்றி அமைப்­பது தொடர்பில் தேவை­யாயின் உப குழு­வொன்றை நிய­மிக்­கு­மாறு ஆலோ­சனை வழங்­கி­யுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, தேர்தல் முறை­மையை மாற்ற வேண்டும் என்­பது தனது தனிப்­பட்ட கருத்­தாகும். அதுவே மக்­களின் அபிப்­பி­ரா­யமும் ஆகும். இதற்கு உரிய வகையில் மதிப்­ப­ளிக்க வேண்டும் எனவும் அவர் கோரி­யுள்ளார்.
மேலும் பணத்­தி­னு­டைய பெறு­ம­தியை கருத்­திற்­கொள்­ளாது கொள்கை மற்றும் இலக்­கு­களை கொண்டு தனது அர­சியல் பய­ணத்தை கட்­டி­யெ­ழுப்ப உத­வு­மாறும் ஜனா­தி­பதி கட்சி தலை­வர்­க­ளிடம் கோரிக்கை முன்­வைத்­துள்ளார்.
தேர்தல் முறைமையை மாற்றி அமைப்­பது தொடர்பில் நேற்று ஜனா­தி­பதி காரி­யா­ல­யத்தில் இடம்­பெற்ற விசேட கட்சி தலை­வர்­களின் கூட்டத்தின்போதே அவர் இவ்­வாறு கூறி­யுள்ளார்.
இந்த பேச்­சு­வார்த்­தையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சபா­நா­யகர் சமல் ராஜ­பக்ஷ, எதிர்க்­கட்சி தலைவர் நிமல் சிறி­பால டி சில்வா உள்­ளிட்ட அர­சியல் கட்சி தலை­வர்கள் கலந்து கொண்­டனர்.
இதன்­போது ஜனா­தி­பதி மேலும் கருத்து தெரி­விக்­கையில்,
நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையின் உச்­சக்­கட்ட அதி­கா­ரத்­திற்கு, மக்­க­ளிடம் நிலை­கொண்­டி­ருந்த மக்­களின் எதிர்ப்பு அலை­யா­னது விகி­தா­சார தேர்தல் முறை­மைக்கும் காணப்­பட்­டது.
விகி­தா­சார தேர்தல் முறை­மையை மாற்­றி­ய­மைக்க வேண்டும் என்­பதை எனது தனிப்­பட்ட கருத்­தாகும்.அத்­தோடு தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் 100 நாள் வேலைத்­திட்­டத்­திலும் வாக்­கு­றுதி அளித்­த­மைக்கு அமை­வாக தேர்தல் முறை­மையை மாற்றி அமைப்­பது தொடர்பில் அர­சாங்கம் தீவி­ர­மாக செயற்­பட்டு வரு­கி­றது என அர­சியல் கட்சி தலை­வர்­க­ளு­ட­னான பேச்­சு­வார்த்­தையின் போது ஜனாதிபதி குறிப்­பிட்­டுள்ளார்.
மேலும் இதன்­போது விகி­தா­சார தேர்தல் முறைமை மாற்றி நாட்­டிற்கு உகந்த முறை­மை­யொன்றை கொண்டு வரு­வது தொடர்பில் கட்சி தலை­வர்கள் தமது ஆலோ­ச­னை­க­ளையும் கோரிக்­கை­க­ளையும் முன்­வைத்­துள்­ளனர்.
இந்த சந்­திப்பின் போது தினேஸ் குண­வர்த்­தன தலை­மை­யி­லான குழு­வி­னு­டைய அறிக்கை தொடர்­பிலும் நீண்ட நேரம் பேச்­சு­வார்த்தை இடம்பெற்­றுள்­ளது.
அத்­தோடு இதன்­போது புதிய தேர்தல் முறை­மையை தயா­ரிப்­பது தொடர்பில் தேவையாயின் உபகுழுவொன்றை நியமித்து தேர்தல் ஆணையாளர் சட்டத்தரணியின் ஆலோசனையை கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.

Post a Comment

0 Comments