இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதிகள் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் நிசாம் காரியப்பர், ஜெனிவா மனித உரிமை பேரவையில் உரையாற்ற தீர்மானித்துள்ளதாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிசாம் காரியப்பர், கல்முனை மாநகர மேயராக பதவி வகித்து வருகிறார். முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் உரையாற்ற போவது இதுவே முதல் முறையாகும்.
அந்த கட்சியின் தலைவரான அமைச்சர் ஹக்கீம் அரச தரப்பில் ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.


0 Comments