தற்போது தைரொய்ட் சுரப்பிகளில் ஏற்படும் புற்று நோயை மிக துல்லியமாக
கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. அதனால் தேவையற்ற அறுவை சிசிச்சைகளை
செய்ய வேண்டியுள்ளது.
எனவே அதை தவிர்க்க அமெரிக்க நிபுணர்கள் மோப்ப நாய் மூலம் தைரொய்ட்
புற்று நோயை கண்டுபிடிக்க வழிவகை செய்துள்ளனர். சிறுநீரை மோப்பம் பிடித்து
அவருக்கு தைரொய்ட் நோய் பாதித்துள்ளதா? இல்லையா? என்பதை நாய்
கண்டுபிடிக்கிறது.
அதேநேரத்தில் தைரொய்ட் புற்று நோய் குறித்த சோதனை 34 பேருக்கு
செய்ய்ப்பட்டது. அதில் தைரொய்ட் பாதிக்காத 88 சதவீதம் பேரையும்
கண்டுபிடித்தது.
சோதனை நடத்தப்பட் 34 பேரில் 4 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதை
பிராங்கி என்ற அந்த நாய் கண்டுபிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பயிற்சி
அளிக்கப்பட்ட மோப்ப நாயை பயன்படுத்தி இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாக
பேராசிரியர் டொனால்ட் போ டென்னர் கூறியுள்ளார்.

0 Comments