அண்மையில் சீகிரிய சுவரோவியத்தில் தனது
காதலனின் பெயரை எழுதிய மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு
இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம்.
சின்னத்தம்பி உதேனி என அறியப்படும்
குறித்த பெண்ணுக்கு குறைந்த பட்ச தண்டனையான இரு வருட சிறைத்தண்டனை
வழங்கப்பட்டுள்ள அதேவேளை இவ்வாறான குற்றங்களுக்கு மேலதிகமாக ரூ.5 லட்சம்
வரையான அபராதமும் விதிக்கப்பட முடியும் என அறியமுடிகிறது. இதேவேளை குறித்த
யுவதியால் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதிப்பை திருத்தவும் முடியாத நிலையே
காணப்படுவதாகவும் நீதிமன்றில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
0 Comments