சம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி சுற்றில் 16 ஆட்டங்கள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மான்செஸ்டரில் நடந்த ஆட்டத்தின் போது, பார்சிலோனா அணி வீரர் நெய்மர், ரசிகர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மான்செஸ்டரில் உள்ள எதியாட் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில், 80ஆவது நிமிடத்தில் பார்சிலோனா அணி வீரர் நெய்மர் களத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டார். சக வீரர்களுடன் நெய்மர் அமர்ந்திருந்தபோது, மான்செஸ்டர் சிட்டியின் ரசிகர் ஒருவர் நெய்மரை வெறுப்பேற்றும்விதத்தில் நடந்து கொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த நெய்மர் அந்த ரசிகருடன் சண்டையில் ஈடுபட்ட காட்சி வீடியோவில் பதிவாகியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.


0 Comments