-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் நகரில் வதியும் மூத்த பிரஜைகளின் பசுமையான நினைவுகளை மீட்டி பார்க்கும் 'அந்தி மாலை பொழுது ஒன்று கூடல்' நிகழ்வு வெள்ளிக்கிழமை(27) மாலை, புத்தளம் மத்திய சிறுவர் பூங்காவில் இடம்பெறவுள்ளது.
சமூகத்துக்காகவும், தத்தமது குடும்பங்களுக்காகவும் ஆற்ற வேண்டிய அனைத்துவிதமான சேவையையும் ஆற்றிவிட்டு ஓய்வுகொண்டுள்ள மூத்த பிரஜைகளுடன் இளைய தலைமுறையினரும் இச்சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.
மூத்த பிரஜைகள் எவ்வகையான திறமைகளை கொண்டிருந்தாலும் அவற்றை வெளிக்காட்ட இந்த அறிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு புத்தளம் நகரபிதா கே.ஏ.பாயிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


0 Comments