Subscribe Us

header ads

அவசியம் ஏற்படின் கிரிக்கெட் சபைத் தலைவர் பதவிக்கு போட்டியிடத் தயங்கமாட்டேன்: அமைச்சர் அர்ஜுன ரணதுங்க

(நெவில் அன்­தனி)


ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்தின் தலைவர் பத­விக்கு தான் போட்­டி­யி­டு­வ­தாக இருப்பின் அது நாட்டின் கிரிக்கெட் விளை­யாட்­டுத்­து­றையை சரி­யான வழியில் இட்­டுச்­செல்­வதைக் குறி­யாகக் கொண்டே அன்றி தனிப்­பட்­ட­வர்­களின் சுய­லா­பத்­திற்­கா­ன­தாக இருக்­காது என துறை­முக, கப்­பல்­துறை, விமா­ன­சே­வைகள் அமைச்­சரும் முன்னாள் உலகச் சம்­பியன் அணியின் தலை­வ­ரு­மான அர்­ஜுன ரண­துங்க தெரி­வித்­துள்ளார். 

நாட்டின் கிரிக்கெட் விளை­யாட்­டுத்­துறை மேம்­பாட்டை முன்­னிட்டு அவ­சியம் ஏற்­படின் அப் பத­விக்கு போட்­டி­யிட தயக்கம் காட்­டப்­போ­வ­தில்லை என அர்­ஜுன குறிப்­பிட்­டுள்ளார்.

கிரிக்கெட் நிறு­வ­னத்தின் தலைவர் பத­விக்கு போட்­டி­யி­டு­மாறு கிரிக்கட் கழ­கங்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்­பட பல தரப்­பினர் தன்னை கோரி­யுள்­ள­தாக அவர் கூறினார்.

இலங்கை கிரிக்கெட் நிறு­வ­னத்தின் அடுத்த தேர்தல் தொடர்­பாக பல­த­ரப்­பினர் தன்­னுடன் கலந்­து­ரை­யாடி வரு­வ­தாகக் குறிப்­பிட்ட அவர், எனினும் அப் பத­விக்கு போட்­டி­யி­டு­வது குறித்து இன்னும் உறு­தி­யான முடிவு எத­னையும் எடுக்­க­வி­ல்லை எனவும் தெரி­வித்தார்.

‘‘கடந்த காலங்­களில் அர­சி­யல்­வா­திகள் சார்­பா­கவே கிரிக்கெட் நிரு­வா­கிகள்
இருந்­தனர். முன்னாள் ஜனா­தி­பதி, அர­சி­யல்­வா­திகள் ஆகி­யோரின் தேவைக்­கேற்ப கிரிக்கெட் நிறு­வ­னத்­திற்கு ஆட்கள் நிய­மிக்­கப்­பட்­டார்கள், இதனால் கிரிக்கெட்­துறை சீர­ழிந்­தது. எனினும் கிரிக்கெட் விளை­யாட்­டி­லி­ருந்து அர­சி­யலை களை­பி­டுங்­கு­வதே புதிய அரசின் குறிக்­கோ­ளாகும். 

கிரிக்கெட் நிறு­வ­னத்­திற்கு வந்தால் கிரிக்கெட் துறையில் அர­சியல் தலை­யீடு
அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டாது. வீரர்கள் விளை­யா­ட­வேண்டும். அதி­கா­ரிகள் நிரு­வ­கிக்­க­வேண்டும். எதிர்­வரும் தேர்தல் குறித்து 1996 உலக சம்­பியன் அணி வீரர்கள் என்­னுடன் கலந்­து­ரை­யா­டி­னார்கள். இவ் வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­களின் பின்னர் இளம் வீரர்­களை ஒன்று திரட்டி உலகக் கிண்­ணத்தை வெல்­லக்­கூ­டிய திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்த கவனஞ் செலுத்­தப்­படும்’’ என அர்­ஜுன ரண­துங்க தெரி­வித்­துள்ளார். 

புதிய அரசின் நூறு நாள் செயற்­றிட்­டத்தை வெற்­றி­க­ர­மாக நிறை­வேற்­று­வது அமைச்­ச­ரவை அந்­தஸ்து அமைச்சர் என்ற வகையில் தனது முத­லா­வது கடமை என்­பதால் அதற்கு தடை ஏற்­ப­டாத வகையில் எதிர்­வரும் கிரிக்கெட் தேர்தல் குறித்து தீர்­மா­னிக்­க­வுள்­ள­தாக அமைச்சர் ரணதுங்க குறிப்பிட்டார்.

கிரிக்கெட் விளையாட்டுக் கழகங்கள் உட்பட சகலரினதும் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு நிலைமைகளை நன்கு ஆராய்ந்து அடுத்த சில வாரங்களில் தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் அர்ஜுன தெரிவித்தார்.

Post a Comment

0 Comments