முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக் ஷ கிணறுகளை புனர்நிர்மாணம் செய்வதில் ஊழல் செய்துள்ளார். ஒரு கிணறுக்கு 5 இலட்சம் ரூபா வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. குறித்த மோசடிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொருளாதார அபிவிருத்தி மற்றும் கொள்கை திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷ டீ சில்வா தெரிவித்தார்.
அதேபோன்று முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் சர்வதேசத்தின் நாணய நிதியத்தின் பிரதானியொருவருடன் செய்து கொண்ட ஒப்பந்தம் தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
முன்னைய அரசாங்கத்தில் பல துறைகளில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் தலைமையின் கிழேயே குறித்த மோசடிகள் இடம்பெற்றன.இதற்கமைய முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக் ஷ கிணறுகளை புனரமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்து பல கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையிட்டுள்ளார்.இதன்படி ஒரு கிணற்றை புனர்நிர்மாணம் செய்வதற்கு 5 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கிணறொன்றை நிர்மாணிப்பதற்கு கூட இவ்வளவு பணத் தொகை தேவைப்படாது. வீணான முறையில் இவ்வாறு பணம் விரயம் செய்து மோசடி செய்துள்ளார்.
நிதி அமைச்சரிடம் இருந்த கோவகள் தொலைந்து போனாலும் என்னிடம் கோவைகள் உள்ளது. குறித்த மோசடியில் விசேடமான விடயம் என்னவெனில் பொது கிணறுகளுக்கு அப்பால் தனியார் சிலரது கிணறுகளும் இதனூடாக புனர் நிர்மாணம் செய்வதற்கு நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது. எனவே, குறித்த கிணறு ஊழல் மோசடி தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுப்போம்.
அதே போன்று முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்இ சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானியொருவரான டி.எஸ்.கே. உடன் தனிப்பட்ட ரீதியில் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளார்.
அத்தோடு இந்திய சினிமா நட்சத்திர கொண்டாட்ட நிகழ்வுஇ பொது நலவாய விளையாட்டு போட்டி இலங்கையில் நடத்துவது தொடர்பாக ஏற்பாடுகளுக்கான செலவினை மத்திய வங்கியே ஏற்று கொண்டது. எனவேஇ இது தொடர்பான அனைத்து மோசடிகள் குறித்து விசாரணை செய்து உரிய தண்டனை பெற்றுக் கொடுப்போம் என்றார்.


0 Comments