Subscribe Us

header ads

வரலாற்றில் இன்று -பெப்ரவரி - 27-


1560 : ஸ்கொட்­லாந்தில் இருந்து பிரெஞ்­சுக்­கா­ரரை வெளி­யேற்ற ஸ்கொட்­லாந்­துக்கும் இங்­கி­லாந்­துக்கும் இடையில் பேர்விக் உடன்­பாடு எட்­டப்­பட்­டது. 

1594 : பிரான்ஸின் மன்­ன­னாக நான்காம் ஹென்றி முடி­சூ­டினான். 

1617 : சுவீடன், ரஷ்­யா­வுக்­கி­டையில் உடன்­டிக்கை கையெ­ழுத்­தி­யா­கி­யது. இதன் மூலம் பால்டிக் கடல்­பி­ராந்­தி­லி­ருந்து ரஷ்யா விலகியது. 

1700 : பப்­புவா நியூகினி பிராந்­தி­யத்தின் புதிய பிரித்­தா­னியா தீவு கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. 

1801 : வாஷிங்டன், டிசி நகரம் அமெ­ரிக்க காங்­கி­ரஸின் நிர்­வா­கத்தின் கீழ் வந்­தது. 

1844 : டொமி­னிக்கன் குடி­ய­ரசு ஹெயிட்­டி­யிடம் இருந்து சுதந்­திரம் பெற்­றது. 

1861 : போலந்தில் ரஷ்ய ஆக்­கி­ர­மிப்பை எதிர்த்து வோர்­சாவில் மக்கள் எதிர்ப்புப் போராட்டம் நடத்­தினர். 

1900 : தென்­னா­பி­ரிக்­காவில் போவர்­களின் தள­பதி பியெட் குரோ­னியே நிபந்­த­னை­யின்றி சர­ண­டை­வ­தாக அறி­வித்தார். 

1900 : பிரித்­தா­னிய தொழிற் கட்சி அமைக்­கப்­பட்­டது. 

1933 : பேர்­லினில் ஜேர்­ம­னியின் நாடா­ளு­மன்றம் தீ வைத்து எரிக்­கப்­பட்­டது. 

1942 : இரண்டாம் உலகப் போரின்­போது  ஜாவா கடலில் இடம்­பெற்ற சமரில் கூட்டுப் படை­களை ஜப்பான் படைகள் தோற்­க­டித்­தன. 

1951 : ஐக்­கிய அமெ­ரிக்­காவில் ஒருவர் இரு­த­ட­வை­க­ளுக்கு மேல் ஜனா­தி­பதித்
தேர்­தலில் போட்­டி­யிட முடி­யா­த­வாறு அர­சி­ய­ல­மைப்புச் சட்டம் திருத்­தப்­பட்­டது. 

1967 : டொமி­னிக்கா ஐக்­கிய இராச்­சி­யத்­திடம் இருந்து சுதந்­திரம் பெற்­றது. 

1976 : முன்னாள் ஸ்பானிய நாடான மேற்கு சகாரா, சாராவி அரபு ஜன­நா­யகக் குடி­ய­ரசு என்ற பெயரில் சுதந்­திரப் பிர­க­டனம் செய்­தது. 

1991 : வளை­குடாப் போரில்,  குவைத் விடு­த­லை­யா­ன­தாக அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் அறி­வித்தார். 

2004 : பிலிப்­பைன்ஸில் பய­ணிகள் கப்­பலில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்பில் 116 பேர் கொல்­லப்­பட்­டனர். 

2007 : மட்­டக்­க­ளப்பு நகரில் உள்ள இலங்கை விமானப் படை­யி­னரின் விமான ஓடு­பா­தையை நோக்கி விடு­தலைப் புலி­களால் நடத்­தப்­பட்ட எறி­கணை வீச்சில் இலங்­கைக்­கான இத்­தா­லிய,  அமெ­ரிக்கத் தூது­வர்கள் காய­ம­டைந்­தனர். 

2010 : சிலியில் ஏற்­பட்­ட 8.8 ரிச்டர் அள­வி­லான பூகம்­ப­தினால் 500 பேர்
பலி­யா­ன­துடன் பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் காயமடைந்தனர்.  

2013 : பிரான்ஸில் தொழிற்சாலையொன்றில் மீது துப்பாக்கிதாரியொருவர் மேற்கொண்ட தாக்குதல்களால் துப்பாக்கிதாரி உட்பட ஐவர் கொல்லப்பட்டனர். மேலும் ஐவர் காயமடைந்தனர்.


Post a Comment

0 Comments