எவர் தனது மனைவியை எந்த சிறையில் தள்ளினாலும் தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை நிறுத்த போவதில்லை என விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
தனது மனைவி ஷசி வீரவன்ஸவை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த அழைத்து வந்த போது அங்கு ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இப்படியான நிலைமை ஏற்படும் என எதிர்பார்த்ததாகவும் நியாயத்தை தான் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அரச தரப்பினர் குற்றச்சாட்டுக்களை புனைத்து அதில் சில்லறைகளாக குட்டிகளை ஈன்று வருவதாகவும் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.


0 Comments