சட்டவிரோத வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்கள் சுற்றி வளைக்கப்படும் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.
பதிவு செய்யப்படாது இரகசியமான முறையில் இயங்கி வரும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
எந்தவிதமான தகுதியும் தராதரமும் பாராது இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்வோர் விமான நிலையத்தில் எதிர்நோக்கி வரும் சிரமங்கள் குறித்து உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு இன்று விஜயம் செய்திருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments