தனது பிள்ளைகள் வீட்டில் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லையென
தெரிவித்து தாயொருவர் பொலிஸாரிடம் முறைப்பாடு தெரிவித்த சம்பவமொன்று
தம்புள்ளயில் நடைபெற்றுள்ளது.
தம்புள்ள பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்ட தாய்,
தனது பிள்ளைகள் படிப்பதில்லையென்ற முறைப்பாட்டை செய்துள்ளதுடன், தனது
பிள்ளைகளை பொலிஸாரை அனுப்பி மிரட்டுமாறும் முறைப்பாடு செய்துள்ளார்.
தனது பிள்ளைகள் இரவில் பாடங்களை படிக்காது நித்திரைக்கு சென்றுவிடுவதாகவும்
குறித்த தாய் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் முறையிட்டுள்ளார்.


0 Comments