Subscribe Us

header ads

2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மம்மிகளின் இறுதி உணவு மீன், சோளம், அவரை


பெரு­வில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட 2000 ஆம் ஆண்­டுகள் பழை­மை­யான மம்­மி­களின் கேசத்தை ஆய்­வுக்­குட்­ப­டுத்­திய போது, அந்த மம்­மிகளுக்­கு­ரி­ய­வர்கள் இறப்­ப­தற்கு முன்னர் எவற்றை உண­வாக உண்­டனர் என்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

வாரி காயன் பிராந்­தி­யத்தில் அகழ்ந்­தெ­டுக்­கப்­பட்ட 14 தனி­ந­பர்­களது மம்­மி­களின் கேசத்தை மேற்­படி ஆய்­வா­ளர்கள் ஆய்­வுக்­குட்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.
இதன் போது அந்த மம்­மி­க­ளுக்­கு­ரி­ய­வர்­களில் அதி­க­ள­வானோர் பிர­தா­ன­மாக மீன், சோளம் மற்றும் அவ­ரைகள் போன்ற தானி­யங்­க­ளையும் உண்டு வந்­துள்­ளமை கண்­ட­றி­யப்­பட்­ட­தாக இந்த ஆய்வில் பங்கேற்ற அமெ­ரிக்க அரி­ஸோனா மாநில பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த ஆய்­வா­ள­ரான கெல்லி கனுட்ஸன் தெரி­வித்தார்.
அந்த மம்­மிகளின் கேசத்­தி­லுள்ள கெரட்டின் எனும் நார்­பு­ர­தத்தின் காபன் மற்றும் நைத­ரசன் சம­தா­னி­களை பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்­தியே இந்த ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது.
நைத­ரசன் சம­தா­னிகள் கடல்வாழ் உயி­ரி­னங்­களில் நிலத்­தி­லுள்­ள­வற்றை விடவும் அதி­க­ள­விலும் காணப்­ப­டு­வதால் அந்த நைத­ரசன் கூறு­களை அடிப்­ப­டை­யாக வைத்து அந்த மம்­மிகளுக்­கு­ரி­ய­வர்கள் இறப்­ப­தற்கு முன் மீன் உணவை உண்­டுள்­ளமை கண்­ட­றி­யப்­பட்­ட­தாக ஆய்­வா­ளர்கள் கூறுகின்றனர்.
மேலும், காபன் சமதானி வகையை அடிப்படையாக வைத்து அந்த மம்மிக்குரியவர்கள் எந்த வகையான தாவர உணவை உண்டனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments