sams lanka holding கிழக்கு மாகாண மாணவர்களினதும் தொழில் தேடுணர்களினதும் நலன் கருதி எக்ஸ்போ-15 உயர்கல்வி தொழில் வழிகாட்டல் கண்காட்சி நேற்று கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்டத்தில் சாய்ந்தமருதது லீ மெரிடியன் மண்டபத்தில் இரண்டாவது முறையாக இடம் பெறுகிறது.
நேற்று காலை 9.15 மணியளவில் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கைக்கான சமாதான தூதுவரும் CIMS CAMPUS முகாமைத்துவ பணிப்பாளருமான தேசமான்ய அன்வர் எம் முஸ்தபா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
இக்கண்காட்சியில் நம் நாட்டு புகழ் பெற்ற கல்விநிறுவனங்களும்,வெளிநாட்டு பல்கலைகழகங்களும் கலந்து கொண்டு புலமைப்பரிசில்களையும், உயர்கல்வி கற்பதற்க்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளன.
இக்கண்காட்சி இன்று மாலை 9.00 பி.ப மணிவரை மட்டுமே இடம்பெற உள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்தனர். நேற்று ஆரம்பமான இந்த கண்காட்சியை கண்டு கழிக்க பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இக்கண்காட்சியை காண்பதற்காக வெளி மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் வருகை தந்ததை காண கூடியதாக இருந்தது. எவ்வேளையில் இதனை ஏற்பாடு செய்த sams lanka holding(PVT)LTD கு இப்பிரதேச புத்திஜீவிகளும்,கல்வியலாளர்களும் நன்றிப் பாராட்டினர்.
இந்த கண்காட்சியை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பிரமுகர்களையும்,மாணவர்களையும் படத்தில் காணலாம்.
செய்தியும் படமும் : கலைமகன்









0 Comments