Subscribe Us

header ads

சவூதி மன்னரின் மறைவுக்கு ஜனாதிபதி மைத்திரி இரங்கல் (PHOTOS)


சவூதி அரேபிய மன்னர் அப்துல் பின் அசீஸின் மறைவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

90 வயதையுடைய சவூதி அரேபிய மன்னர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால இன்று காலை கொழும்பில் உள்ள சவூதி தூதரகத்துக்குச் சென்று குறிப்புப் புத்தகத்தில் கையெழுத்திட்டதுடன், அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் கலந்துகொண்டார்.

இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் 1974ம் ஆண்டிலிருந்து சிறந்த நட்புறவு தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments