Subscribe Us

header ads

சவுதி மன்னரின் ஜனாசா நல்லடக்கம் - இலங்கை அமைச்சர்களும் பங்கேற்பு (PHOTOS)

சவுதி அரேபிய மன்னர் அப்துல் பின் அசீஸின் ஜனாசா நல்லடக்கத்தில் கலந்து கொள்வதற்காக இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர்கள் சிலர் அங்கு சென்றுள்ளனர்.

அமைச்சர்களான ரிசாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், அப்துல் ஹலீம் மற்றும் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி ஆகியோர் சவுதி பயணமாகினர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய இவர்கள் சவுதி சென்றனர்.

சவுதி மன்னரின் அனுதாபச் செய்தியைக் கேள்வியுற்றதும் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பிலுள்ள சவுதி தூதரகத்துக்குச் சென்று தூதுவரைச் சந்தித்து தனது அனுதாபங்களைத் தெரிவித்திருந்தார்.

அங்கு வைக்கப்பட்டிருந்த அனுதாபக் குறிப்பிலும் ஜனாதிபதி கையெழுத்திட்டிருந்தார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீமும் சவுதி தூதரகத்துக்கு நேற்றையதினம் சென்றிருந்தார்.

தொடர்புபட்ட செய்தி


Post a Comment

0 Comments