முதலமைச்சருக்கு வழங்கப்படும் உத்தியோகபுர்வ வாகனங்கள் மற்றும் வாசஸ்தலம் என்பன தனக்கு வேண்டாம் என ஊவா மாகாண முதலமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
புதிய முதலமைச்சராக இன்று தனது பொறுப்புக்களை ஏற்று கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
முதலமைச்சரின் உத்தியோகபுர்வ வாசஸ்தலம் மக்களின் பாவனைக்கு விடப்படும் எனவும் தான் நேரடியாக மக்களுடன் இணைந்து கருமமாற்றவுள்ளதாகவும் முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments