Subscribe Us

அரசாங்கம் தொடர்பில் ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வையுங்கள்: ஜனாதிபதி

அரசாங்கத்தின் முன்னெடுப்புகளை சரிவர வழிநடத்திச்செல்ல அனைத்து கட்சிகளனதும் ஒத்துழைப்பைக் கோரியுள்ள ஜனாதிபதி, ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைக்குமாறு தெரிவித்துள்ளார்.

சிவில் சமூக பிரதிநிதிகளுடன் நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்த அதேவேளை தேசிய நிறைவேற்று சபையில் சிவில் சமூக பிரதிநிதிகளும் இணைந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யும்படி ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையையும் சம்பந்தப்பட்ட கட்சிகளுடன் கலந்துரையாடி பரிசீலிப்பதாகவும் வாக்குறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments