இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனம் பணம் திண்ணும் பேய் அல்ல என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
குறித்த கூட்டுத்தாபனத்தில் கடந்த காலங்களில் பாரிய நஷ்டம் அடைவதற்கான காரணம் பதவியில் இருந்த அதிகாரிகளின் தன்னிச்சையான செயற்பாடுகளாகும் என தெரிவித்தார்.
பெற்ரோலிய கூட்டுத்தாபனங்களில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடி தொடர்பாக தேடிபார்ப்பதற்கு தன்னால் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.
அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கொலன்னாவையில் நேற்று இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு இதனை தெரிவித்துள்ளார்.


0 Comments