ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14ம், 15ம் திகதிகளில் ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளது.
இந்தய விஜயத்தின் போது, ஜனாதிபதி திருப்பதி கோயில் மற்றும் புத்தகாயவிற்கும் விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதம் 14, 15ம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.


0 Comments